NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி /  "50% உச்சவரம்பு நீக்கப்படும், தேவையான அளவுக்கு இடஒதுக்கீடு தரப்படும்": ராகுல் காந்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
     "50% உச்சவரம்பு நீக்கப்படும், தேவையான அளவுக்கு இடஒதுக்கீடு தரப்படும்": ராகுல் காந்தி

     "50% உச்சவரம்பு நீக்கப்படும், தேவையான அளவுக்கு இடஒதுக்கீடு தரப்படும்": ராகுல் காந்தி

    எழுதியவர் Sindhuja SM
    May 06, 2024
    05:58 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்கி, தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களை காங்கிரஸ் உயர்த்தும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்தார்.

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்லமில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, அரசியல் சாசனத்தைக் காப்பாற்றவே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது என்றார்.

    "பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அரசியல் சாசனத்தை முறியடிக்க விரும்புகின்றன. அதை மாற்ற வேண்டும். காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் அதைக் காப்பாற்ற முயற்சிக்கின்றன. இந்த அரசியலமைப்பு நமக்கு ஜல்(நீர்), ஜங்கல்(காடு), ஜமீன்(நிலம்) ஆகிய உரிமைகளை வழங்கியுள்ளது. நரேந்திர மோடி அவற்றை அகற்ற விரும்புகிறார். அவருக்கு முழு அதிகாரம் வேண்டும்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    இந்தியா 

    'மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது': காங்கிரஸ் 

    வெற்றி பெற்றால் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பாஜக தலைவர்கள் அறிவித்துள்ளனர். அதனால்தான் 400 இடங்கள் என்ற முழக்கத்தை அவர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் 400ஐ விடுங்கள், அவர்களுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது. இடஒதுக்கீட்டை நீக்குவோம் என்று சொல்கிறார்கள். இந்த இடத்தில் இருந்து சொல்கிறேன், 50 சதவீத வரம்பைத் தாண்டி இடஒதுக்கீட்டை நாங்கள் அதிகரிப்போம். ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தேவையோ, அவ்வளவு இடஒதுக்கீடு வழங்குவோம்''என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மக்களவைத் தேர்தலுக்கான உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே இடஒதுக்கீட்டுக்கான விவாதம் சூடுபிடித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    ராகுல் காந்தி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    காங்கிரஸ்

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு திமுக
    காங்கிரஸ் கட்சியில் அமைதியின்மை: மக்களவை தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே போட்டியிடமாட்டார் என தகவல்  மக்களவை
    மக்களவை தேர்தலுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்  மக்களவை
    ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடா' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மும்பை பயணம் திமுக

    ராகுல் காந்தி

    முகமது ஷமிக்கு ஆதரவாக நின்ற ராகுல் காந்தி; பழைய வரலாற்றை புரட்டும் காங்கிரஸ் முகமது ஷமி
    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  தேர்தல் ஆணையம்
    ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" என பேசிய திமுக எம்பியால் மக்களவையில் சர்ச்சை திமுக
    ராகுலுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை; பிரணாப் முகர்ஜியின் மகள் வெளியிட்டுள்ள புத்தகத்தில் பரபரப்பு காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025