NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ: வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டதால் உச்ச நீதிமன்றம் காட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ: வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டதால் உச்ச நீதிமன்றம் காட்டம் 

    உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ: வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டதால் உச்ச நீதிமன்றம் காட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 15, 2024
    02:59 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று மாநில அரசை கடுமையாக சாடியுள்ளது.

    வனத் தீயணைப்புப் பணியாளர்கள் தேர்தல் பணிக்கு ஏன் அனுப்பப்பட்டார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரகாண்ட் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இது குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, "காட்டு தீக்கு மத்தியில் தேர்தல் பணியில் வன தீயணைப்பு ஊழியர்களை ஏன் நியமித்தீர்கள்?" என்று உச்ச நீதிமன்றம் உத்தரகாண்ட் அரசின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது.

    உத்தரகாண்டில் காட்டுத் தீ விவகாரம் தொடர்பான மனுக்கள் விசாரணையின் போது பேசிய வழக்கறிஞர் பரமேஷ்வர் என்பவர், "பெரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது, 40 சதவீத வனப்பகுதி தீயில் எரிந்து கொண்டிருக்கிறது." என்று கூறினார்.

    இந்தியா 

    நவம்பர் முதல் 1,437 ஹெக்டேர் காடுகள் பாதிப்பு 

    அந்த வழக்கறிஞருக்குப் பதிலளித்த உத்தரகாண்ட் வழக்கறிஞர், புதிய தீ விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார்.

    மேலும், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நிதியையும் வழங்கவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

    மேலும், "இந்த தீயை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநிலத்தின் ஆறு பேர் கொண்ட குழு பணி புரிந்து வருகிறது. தீயை அணைப்பதற்காக 9,000 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள்." என்று கூறினார்.

    உத்தரகாண்டில் ஏற்பட்ட காட்டுத் தீயால் நவம்பர் முதல் 1,437 ஹெக்டேருக்கும் அதிகமான பசுமைப் பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக வனத் துறை புல்லட்டின் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    உத்தரகாண்ட்

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிந்து விபத்து: 3வது நாளாக தொடரும் 40 தொழிலாளர்களை மீட்கும் பணி  விபத்து
    நிலச்சரிவால் உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தாமதம்  புது டெல்லி
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம் விபத்து
    உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக தொடரும் போராட்டம் தாய்லாந்து

    உச்ச நீதிமன்றம்

    கர்நாடக துணை முதல்வர் மீதான பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்  கர்நாடகா
    உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுத்தது மேற்கு வங்காளம் மேற்கு வங்காளம்
    கார்பெட் புலிகள் காப்பகத்தில் மரம் வெட்டப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் இந்தியா
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025