NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் முடக்கம், ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் முடக்கம், ஏன்?
    150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் முடக்கம்

    150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் முடக்கம், ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 12, 2023
    04:21 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கு எதிரான உள்ளடக்கங்களை வெளியிட்டதாகக் கூறி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒரு இந்தத் தகவலை தற்போது பகிர்ந்திருக்கிறார்.

    தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிரிவு 69A-வின்படி இந்தியா நாட்டின் இறையாண்மை, நேர்மை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக எந்த டிஜிட்டல் தளத்தினையும் முடக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பெற்றிருக்கிறது.

    மேற்கூறிய இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களை, பொய்யான தகவல்களைப் பரப்பியது மற்றும் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ளடக்கங்களை வெளியிட்டது, உள்ளிட்ட காரணங்களுக்காக முடக்கியதாகத் தெரிவித்திருக்கிறது தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்.

    இந்தியா

    மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியது என்ன? 

    2021 முதல் 2022 காலத்தில் மட்டும் 78 யூடியூப் சேனல்கள் மற்றும் 560 யூடியூப் லிங்க்குகளை முடக்கியதாக, கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மட்டுமல்லாது, பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களை திசைதிருப்பும் எந்தவிதமான சமூக வலைத்தள கணக்கா இருந்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த 35 யூடியூப் சேனல்களை இந்தியாவில் மத்திய அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    மத்திய அரசு

    தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு! மொபைல்
    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு  அதிமுக
    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்  போக்குவரத்து காவல்துறை
    பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு  இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 214 கொரோனா பாதிப்பு கொரோனா
    ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்  ஏர் இந்தியா
    விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள்  மல்யுத்த வீரர்கள்
    விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025