NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புத்தகயாவின் மகாபோதி கோவில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? போராட்டத்தில் குதித்த புத்த துறவிகள்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    புத்தகயாவின் மகாபோதி கோவில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? போராட்டத்தில் குதித்த புத்த துறவிகள்
    மகாபோதி கோயிலின் மீது முழு கட்டுப்பாட்டைக் கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்

    புத்தகயாவின் மகாபோதி கோவில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? போராட்டத்தில் குதித்த புத்த துறவிகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 14, 2025
    05:49 pm

    செய்தி முன்னோட்டம்

    பீகாரில் நிரஞ்சனா நதிக்கரையில் அமைந்துள்ள புத்தகயாவில், புத்த சமூகம் தங்கள் புனிதமான கோயிலான மகாபோதி கோயிலின் மீது முழு கட்டுப்பாட்டைக் கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    பிரதான கோயில் பகுதிக்கு வெளியே உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான டோமுஹான் அருகே புத்த துறவிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    1949 ஆம் ஆண்டு புத்தகயா கோயில் சட்டம் (BT சட்டம்) ரத்து செய்யப்பட வேண்டும் மற்றும் மகாபோதி கோயிலின் நிர்வாகத்தில் பௌத்தர்களுக்கு பிரத்யேக அதிகாரம் வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கைகளில் அடங்கும்.

    எதிர்ப்பு

    பௌத்தர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?

    தற்போதைய 75 ஆண்டுகால சட்டத்தின் கீழ், எட்டு உறுப்பினர்களைக் கொண்ட புத்த கயா கோயில் மேலாண்மைக் குழு (BTMC) இந்தக் கோயிலை நிர்வகிக்கிறது.

    இதில் நான்கு பௌத்தர்களும் நான்கு இந்துக்களும் உள்ளனர்.

    கயா மாவட்ட நீதிபதி நேரடித் தலைவராக உள்ளார்.

    இந்த அமைப்பு பௌத்த கட்டுப்பாட்டைக் குறைக்கிறது என்றும், உண்மையான மத சுயாட்சியை விட காலனித்துவ கால சமரசத்தை பிரதிபலிக்கிறது என்றும் போராட்டக்காரர்கள் வாதிடுகின்றனர்.

    "எங்கள் கோயில் நிர்வாகத்தை நடத்துவதற்கு ஏன் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும்?..பௌத்த சமூகம் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தெருவில் தொடர்ந்து போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளது," என்று போராட்டத்திற்கு தலைமை தாங்கும் துறவி ஆகாஷ் லாமா கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

    தொடக்கம் 

    இது எப்படி தொடங்கியது?

    12ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய படையெடுப்புகளைத் தொடர்ந்து இந்தியாவில் புத்த மதம் வீழ்ச்சியடைந்த பிறகு, இந்து துறவிகள் புத்த கயா கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டனர்.

    1590ஆம் ஆண்டு சைவ மதத்தைச் சேர்ந்த காமண்டி கிரி, கோயிலுக்கு அருகில் ஒரு மடத்தை நிறுவினார்.

    காலப்போக்கில், புத்தர் ஒரு விஷ்ணு அவதாரம் என்ற நம்பிக்கை, இந்துக்கள் பாதுகாவலர் பதவியில் தொடர ஒரு வாதமாக மாறியது.

    19ஆம் நூற்றாண்டில், புத்த மறுமலர்ச்சியாளர் தர்மபாலர், கோயிலில் புத்த மத இருப்பை மீட்டெடுக்க இந்துகளுக்கு எதிராக ஒரு சட்டப் போராட்டத்தைத் தொடங்கினார்.

    சுதந்திரத்திற்குப் பிறகு, மோதலைத் தீர்க்க பீகார் அரசாங்கத்தால் BT சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்துக்கள் மற்றும் புத்த மதத்தினர் இருவரும் வழிபட அனுமதித்தாலும், பௌத்தர்களை ஒருபோதும் முழுமையான கட்டுப்பாட்டிற்கு அனுமதிக்கவில்லை.

    FCRA 

    வெளிநாட்டு பணப்புழக்கம் தவறாக பயன்படுத்தப்படுவதாக வாதம்

    2002 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மகாபோதி கோயிலுக்கு உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடைகள் வருகின்றன.

    தவறான நிர்வாகம் மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பாக உள்கட்சி மோதல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளும் பல ஆண்டுகளாக பௌத்தர்களால் எழுப்பப்பட்டுள்ளன.

    இருப்பினும், அதிகாரிகள் இந்தக் கூற்றுக்களை மீண்டும் மீண்டும் மறுத்து, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) கீழ் நிதி தணிக்கை செய்யப்படுவதாகக் கூறினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பீகார்

    சமீபத்திய

    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு
    ஜூன் மாதத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்க விலை; இன்றைய (ஜூன் 2) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு அமெரிக்கா
    நார்வே செஸ் 2025: கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் டி.குகேஷ் டி.குகேஷ்

    பீகார்

    சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது? உத்தரப்பிரதேசம்
    உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை இந்தியா
    அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு  காவல்துறை
    Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது? பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025