NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோடி 3.0 அமைச்சரவை: மக்களவை சபாநாயகர் யாராக இருக்கக்கூடும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோடி 3.0 அமைச்சரவை: மக்களவை சபாநாயகர் யாராக இருக்கக்கூடும்?
    சபாநாயகர் பதவிக்கு டக்குபதி புரந்தேஸ்வரியின் பெயர்தான் அதிகம் யூகிக்கப்படுகிறது

    மோடி 3.0 அமைச்சரவை: மக்களவை சபாநாயகர் யாராக இருக்கக்கூடும்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 11, 2024
    03:28 pm

    செய்தி முன்னோட்டம்

    மோடி தலைமையிலான அமைச்சரவை இலாக்காக்கள் நேற்று அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்டது.

    அடுத்தகட்டமாக மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் அனைவரின் கவனம் திரும்பியுள்ளது.

    NDA கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 272 இடங்கள் பெற்றுள்ளதால், கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பியே ஆட்சி அமைத்துள்ளது.

    இதன் விளைவாக, சபாநாயகர் பதவிக்கு கூட்டணி கட்சிகள் குறி வைத்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

    குறிப்பாக, 28 லோக்சபா இடங்களைக் கொண்ட இரண்டு கிங்மேக்கர்களான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடி-யு) ஆகியவை அந்த முக்கிய பதவியை எதிர்பார்க்கின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    இருப்பினும், கூட்டணிக் கட்சிகளில் இருந்து மக்களவை சபாநாயகரை நியமிக்க பாஜக விரும்பவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

    மக்களவை சபாநாயகர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

    அரசியலமைப்பின் 93வது பிரிவின்படி, புதிய மக்களவை முதல் முறையாக கூடுவதற்கு முன்பு சபாநாயகர் பதவி காலியாகிறது.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.பி.க்கள்) பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக இடைக்கால சபாநாயகரை குடியரசுத் தலைவர் நியமிப்பார்.

    இதைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் தனிப்பெரும்பான்மையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    அதாவது, மக்களவையின் சபாநாயகராக வருவதற்கு, அவையில் இருக்கும் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

    சபாநாயகரை நியமிக்க எந்த அளவுகோலும் இல்லை. பாஜக தலைவர்களான சுமித்ரா மகாஜன் மற்றும் ஓம் பிர்லா இருவரும், முறையே கடந்த 2014-2019 மற்றும் 2019-2024 ஆண்டுகளில் மக்களவைகளில் சபாநாயகராக இருந்தனர்.

    சபாநாயகரின் பங்கு

    மக்களவை சபாநாயகரின் பங்கு?

    மக்களவை சபாநாயகர் என்பது ஒரு முக்கியமான பதவியாகும். ஏனெனில் அவர் உத்தரவின் கீழ் தான் சபை நடக்கவேண்டும்.

    சபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பதால், சபாநாயகர் என்பவர் கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டும்.

    சபாநாயகரும் ஒரு குறிப்பிட்ட கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருப்பதால், இந்த பாத்திரம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    முன்னோடி

    யார் பெயர்கள் அடிபடுகின்றன?

    ஒரு சில ஊடக செய்திகள் படி, சபாநாயகர் பதவிக்கு டக்குபதி புரந்தேஸ்வரியின் பெயர்தான் அதிகம் யூகிக்கப்படுகிறது.

    தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர் என்.டி.ராமராவின் மகளான, டக்குபதி புரந்தேஸ்வரி, ஆந்திராவை சேர்ந்த பாஜக அரசியல்வாதி மற்றும் மாநில கட்சியின் தலைவரும் ஆவார்.

    புரந்தேஸ்வரி 2009இல் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திலும், 2012இல் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

    ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் இருந்து 2.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் புரந்தேஸ்வரி வெற்றி பெற்றார்.

    லோக்சபா சபாநாயகராக அவர் பெயர் பரிந்துரைப்பு பட்டியலில் இருப்பதால், தற்போது அவர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.

    மேலும் அவர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனி ஆவார்.

    அதன்மூலம் அவரையும் சமாதானப்படுத்த முடியும் என பாஜக கணக்கு போடுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சபாநாயகர்
    மோடி
    அமைச்சரவை
    மக்களவை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சபாநாயகர்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் 'டிஜிட்டல் ஹவுஸ்' திட்டம் இன்று முதல் அறிமுகம்  தமிழ்நாடு
    எதிர்க்கட்சி துணை தலைவரின் இருக்கை விவகாரம் - சபாநாயகரை சந்தித்து மனு  ஓ.பன்னீர் செல்வம்
    ஆந்திரா சட்டசபை - விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட நடிகர் பாலகிருஷ்ணா ஆந்திரா
    புதுச்சேரி அமைச்சர் நீக்கப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல் புதுச்சேரி

    மோடி

    பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு ஸ்டாலின்
    2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி இந்தியா
    இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் மேலும் 10,000 வீடுகள் - அடிக்கல் நாட்டப்பட்டது  இலங்கை
    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கர்

    அமைச்சரவை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தமிழ்நாடு
    தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம் மு.க ஸ்டாலின்

    மக்களவை

    நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்  நாடாளுமன்றம்
    அமளிதுமளியான நாடாளுமன்றம்; மொத்தம் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட் நாடாளுமன்றம்
    குற்றவியல் சட்ட மசோதா: மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 4 மசோதாக்கள் நிறைவேற்றம் அமித்ஷா
    நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு  நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025