NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'அம்ரித்பால் தப்பிக்கும் வரை 80,000 போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்': உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அம்ரித்பால் தப்பிக்கும் வரை 80,000 போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்': உயர்நீதிமன்றம்
    அம்ரித்பால் சிங் ஒரு தீவிர போதகர் மற்றும் பிரிவினைவாதி ஆவார்.

    'அம்ரித்பால் தப்பிக்கும் வரை 80,000 போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்': உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 21, 2023
    04:55 pm

    செய்தி முன்னோட்டம்

    பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், இன்று(மார் 21) பஞ்சாப் காவல்துறையை கடுமையாக சாடியதுடன், காலிஸ்தானி தலைவர் அம்ரித்பால் சிங்குக்கு எதிரான நடவடிக்கையின் நிலை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது.

    "உங்களிடம் 80,000 போலீசார் உள்ளனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். அம்ரித்பால் சிங் எப்படி தப்பினார்?" என்று பஞ்சாப் அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இது மாநில காவல்துறையின் பெரும் தோல்வி என்றும் நீதிமன்றம் கூறி இருக்கிறது.

    காலிஸ்தான் தலைவர் மற்றும் அவரது அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் டி' உறுப்பினர்களுக்கு எதிராக பஞ்சாப் காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் உயநீதிமன்றம் இதை தெரிவித்திருக்கிறது.

    பஞ்சாப்

    மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற அம்ரித்பால்

    அம்ரித்பால் சிங்குக்கு எதிராக சனிக்கிழமையன்று பெரும் நடவடிக்கையை எடுத்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் 120 பேரை கைது செய்துள்ளதாகவும் பஞ்சாப் போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

    அம்ரித்பால் சிங்கைப் பிடிக்க சனிக்கிழமையன்று தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததது. ஆனால், தன்னை போலீசார் நெருங்குகின்றனர் என்பதை தெரிந்து கொண்ட அமிரித்பால் ஒவ்வொரு வாகனமாக மாறி தப்பித்துவிட்டார்.

    அம்ரித்பால் சிங், சனிக்கிழமை மாலை ஜலந்தரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றதைக் போலீசார் கண்டுள்ளனர்.

    அம்ரித்பால் சிங் ஒரு தீவிர போதகர் மற்றும் பிரிவினைவாதி ஆவார்.

    கடந்த மாதம், தனது முக்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக இவர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஞ்சாப்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பஞ்சாப்

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை கனடா
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

    இந்தியா

    இதுவரை இல்லாத உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை! இன்றைய விலை பட்டியல் தங்கம் வெள்ளி விலை
    டெல்லியில் அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண்ணின் உடல் மீட்பு டெல்லி
    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக பீகார் யூடியூபர் கைது தமிழ்நாடு
    மெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் - கட்டண விபரம் என்ன தெரியுமா? மெட்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025