NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: என்னென்ன எதிர்பார்க்கலாம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: என்னென்ன எதிர்பார்க்கலாம்?
    5 அமர்வுகள் கொண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் - மத்திய அரசு அறிவிப்பு

    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: என்னென்ன எதிர்பார்க்கலாம்?

    எழுதியவர் Nivetha P
    Sep 01, 2023
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்றம் கூட்டத்தொடர் அண்மையில் நடந்துமுடிந்த நிலையில், தற்போது வரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

    மேலும், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கொண்டாட்டக்காலத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் முக்கிய ஆக்கபூர்வமான ஆலோசனைகள் மற்றும் பயனுள்ள முடிவுகளை மேற்கொள்ள நாடாளுமன்றம் காத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

    இந்த கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடக்கும் என்று வெளியாகியுள்ள தகவல் இக்கூட்டத்தொடர் மீது மேலும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சிறப்பு கூட்டமானது அண்மையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும் என்று கூறப்படுவதால், அக்கட்டிடத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

    கூட்டத்தொடர் 

    செப்டம்பர் 18ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடக்கவுள்ள சிறப்பு கூட்டத்தொடர் 

    இதனைத்தொடர்ந்து வரும் செப்டம்பர் 9, 10.,தேதிகளில் ஜி20 மாநாடு டெல்லியில் நடக்கவுள்ள நிலையில், செப்டம்பர் 18ம்தேதி துவங்கி 22ம்தேதி வரை நடக்கவுள்ள இக்கூட்டத்தொடரில் ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்த சிறப்புகள் குறித்தும், 'சந்திரயான் 3' விண்கல வெற்றி குறித்தும் மத்திய அரசின் அடுத்த இலக்கு குறித்தும் இந்த கூட்டத்தொடரில் நிச்சயம் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    மேலும், வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில், இத்தேர்தல் முன்னதாக நடத்த முடிவுச்செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிடும் நோக்கில் இக்கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது என்ற பேச்சுக்களும் அரசியல் வட்டாரங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர்
    சந்திரயான் 3
    நாடாளுமன்றம்
    தேர்தல்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    பிரதமர்

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் உலக செய்திகள்
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா

    சந்திரயான் 3

    லேண்டர் மாடியூலின் Deboosting நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ இஸ்ரோ
    இறுதிக்கட்டப் பணிகளை முடித்து தரையிறக்கத்திற்குத் தயாராகும் சந்திரயான் 3 இஸ்ரோ
    சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலை செய்யவிருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    சந்திரயான்-3 தரையிறக்கம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம்; வலுக்கும் கண்டனங்கள்  பிரகாஷ் ராஜ்

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது புதிய நாடாளுமன்றம்
    மழைக்கால கூட்டத்தொடர் 2023 : ஜூலை 19 ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு மத்திய அரசு
    சிங்கப்பூர் நாடாளுமன்ற எம்பிக்களாக பதவியேற்க இருக்கும் 3 இந்திய வம்சாவளியினர் சிங்கப்பூர்
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம் எதிர்க்கட்சிகள்

    தேர்தல்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு ஈரோடு
    நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ: வரலாறு படைத்தார் ஹெகானி ஜகாலு இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025