NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / படிக கல்லால் உருவாக்கப்பட்ட எடைக்கல் - கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    படிக கல்லால் உருவாக்கப்பட்ட எடைக்கல் - கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு 
    படிக கல்லால் உருவாக்கப்பட்ட எடைக்கல் - கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு

    படிக கல்லால் உருவாக்கப்பட்ட எடைக்கல் - கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு 

    எழுதியவர் Nivetha P
    Aug 08, 2023
    02:14 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 9ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

    இதில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சூடுமண்ணால் செய்த விலங்குகளின் உருவங்கள், தங்க அணிகலன்கள், வட்ட சில்லுகள், செப்பு ஊசி, எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைகள், ஆட்ட காய்கள், உள்ளிட்ட 183 தொல்பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தற்போது 9ம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடைக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி இந்த 9ம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்கப்பட்டது.

    பணிகள் 

    10க்கு மேற்பட்ட குழிகளை தோண்ட முன்னேற்பாடு பணிகள் 

    மேலும் இங்கு நடந்து வரும் அகழாய்வு பணியில் இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக்கோல்கள், உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    வழக்கமாக இந்த அகழாய்வு பணிகள் ஜனவரி மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு அருங்காட்சியகத்தில் தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் தாமதமாக இப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

    அதேபோல், 10 குழிகள் வரை தோண்டப்படுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், இம்முறை அதற்கு மேற்பட்ட குழிகளை தோண்ட தொல்லியல் துறை முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருவதாக தெரிகிறது.

    அதில் கிடைக்கும் பொருட்களுக்கு ஏற்பவே, குழிகளின் ஆழம் நிர்ணயிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிவகங்கை
    தொல்லியல் துறை

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    சிவகங்கை

    கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு
    சிவகங்கை கீழடி அருங்காட்சியகத்தில் என்னென்ன இருக்கிறது என ஓர் பார்வை தமிழ்நாடு
    கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா? தமிழ்நாடு

    தொல்லியல் துறை

    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள்  காஞ்சிபுரம்
    ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு  ஹைதராபாத்
    தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை  மு.க ஸ்டாலின்
    விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்  விருதுநகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025