
உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பாண்டிச்சேரி இளைஞர் பலியான விவகாரம்; பல்லாவரம் மருத்துவமனைக்கு சீல்
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற வாலிபர், சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பிற்காக அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சையின் போதே அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், சம்மந்தப்பட்ட தாம்பரம் BP ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
விசாரணையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிர் காக்கும் உபகரணங்களும் மருந்துகளும் இல்லையென தெரிய வந்துள்ளது.
embed
பல்லாவரம் மருத்துவமனைக்கு சீல்
#BREAKING || இளைஞர் பலி - மருத்துவமனையை மூட உத்தரவு சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரம் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்பரம் தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவு#weightloss #surgery... pic.twitter.com/NLF9kOqGZ3— Thanthi TV (@ThanthiTV) May 8, 2024