அடுத்த செய்திக் கட்டுரை
    
     
                                                                                வானிலை அறிக்கை: மார்ச் 6- மார்ச் 10
                எழுதியவர்
                Sindhuja SM
            
            
                            
                                    Mar 06, 2023 
                    
                     01:56 pm
                            
                    செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் மார்ச் 6ஆம் தேதி வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 6ஆம் தேதி மற்றும் மார்ச் 7ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மார்ச் 8ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரை தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாக இருக்கும். கடந்த 24 மணிநேரங்களில் திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.
ட்விட்டர் அஞ்சல்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் முழுவதும் பதிவான வெப்பநிலை
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 6, 2023