வானிலை அறிக்கை: மார்ச் 4- மார்ச் 8
தமிழகத்தில் மார்ச் 4ஆம் தேதியிலிருந்து மார்ச் 6ஆம் தேதி வரை கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மார்ச் 7ஆம் தேதி மற்றும் மார்ச் 8ஆம் தேதிகளில் தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாக இருக்கும். கடந்த 24 மணிநேரங்களில் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை. மேலும், மீனவருக்கான எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.