தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 21ஆம் தேதிகளில் தென் தமிழக மற்றும் வட உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 22 முதல் 24ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸாகவும் இருக்கும்.