Page Loader
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை அறிக்கை 
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை அறிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Apr 12, 2023
06:41 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது.

embed

 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது. 

pic.twitter.com/VjQ2S71KWm— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) April 12, 2023