NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சூறையாடப்பட்டன
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சூறையாடப்பட்டன
    மணிப்பூரில் தொடரும் வன்முறை; ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சூறையாடப்பட்டன

    மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சூறையாடப்பட்டன

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 04, 2023
    08:26 am

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில், நேற்று, (ஆகஸ்ட் 4) குறைந்தது இரண்டு பாதுகாப்புச் சாவடிகளில், கலவர கும்பல் சூறையாடியதைத் தொடர்ந்து, தானியங்கி துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டன என்று தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மணிப்பூர் காவல்துறையின் கூற்றுப்படி, ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒரு கலவர கும்பல், பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் ஆயுதப்படை காவல்துறையின் இரண்டாவது பட்டாலியனின், கெய்ரன்பாபி போலீஸ் அவுட்போஸ்ட் மற்றும் தங்கலவாய் போலீஸ் அவுட்போஸ்ட் ஆகியவற்றை சூறையாடி ஆயுதங்களை கொள்ளையடித்துள்ளது.

    மேலும், ஹீங்காங் மற்றும் சிங்ஜமேய் காவல் நிலையங்களில் இருந்தும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அந்த கும்பல் கைப்பற்ற முயன்றபோது, பாதுகாப்பு படையினர் அவர்களின் தாக்குதலை முறியடித்ததாக கூறப்படுகிறது.

    card 2

    கலவரத்தை தொடர்ந்து அமைக்கப்பட்ட சோதனை சாவடிகள் 

    "கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரம் போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதால், மாநிலம் முழுவதும் தொடர்ந்து கொந்தளிப்பாகவும் பதட்டமாகவும் உள்ளது" என்று காவல்துறை அறிக்கை மேலும் கூறியது.

    மணிப்பூரில், கலவரம் பாதிக்கப்பட்ட இடங்களில் இதுவரை மொத்தம் 129 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விதிமீறல்கள் தொடர்பாக சுமார் 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இன மோதல்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மைதேயின் பட்டியல் பழங்குடியினர் (ST) அந்தஸ்து கோரிக்கையைத் தொடர்ந்து வெடித்த இந்த வன்முறையில்,நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    கலவரம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மணிப்பூர்

    மணிப்பூர் பழங்குடியின பெண்கள் கற்பழிப்பு விவகாரம்: ஒருவர் கைது  கைது
    மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்  உச்ச நீதிமன்றம்
    எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்ட அவைகள் நாடாளுமன்றம்
    மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ட்விட்டர்

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025