NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல்
    கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல்

    கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல்

    எழுதியவர் Nivetha P
    Nov 27, 2023
    02:46 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்துவரும் நிலையில், அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை காரணமாக நீரின் அளவு உயர்ந்துள்ளது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    இதனிடையே சென்னையில் தொடரும் மழை காரணமாக சென்னைவாசிகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் செம்பரப்பக்கம், புழல், சோழவரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    இன்றைய(நவ.,27)நிலவரப்படி, செங்குன்றத்தில் 3-செ.மீ.,மழையும், சோழவரத்தில் 5-செ.மீ.,மற்றும் கும்மிடிப்பூண்டியில் 5.6-செ.மீ.,மழை பதிவாகியுள்ளது.

    இதனால் நேற்று(நவ.,26)செம்பரப்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 164 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 532 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    இதன் காரணமாக 24 அடி உயரம் கொண்ட அணையில் இப்பொழுது 22.19 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    இது முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில், அணையிலிருந்து உபரிநீர் திறந்துவிட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    அணை 

    குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து 189 கனஅடி நீர் திறப்பு

    இதனை தொடர்ந்து, 21.20 உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது வினாடிக்கு 281 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 18.89ஆக உயர்ந்துள்ளது.

    அதேபோல் 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 16.05 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    இந்த ஏரியில் தற்போது வினாடிக்கு 174 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 12 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து 189 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    35 அடி உயரம் கொண்ட கும்மிடிப்பூண்டி ஏரியில் தற்போது 30.62 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், வினாடிக்கு 100 கனஅடி நீர்வரத்து உள்ளது. 162 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பருவமழை
    குடிநீர்
    விவசாயிகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சென்னை

    திரையரங்கில் அமைச்சர் மகன் ரமேஷ் தாக்கப்பட்ட விவகாரம் - போலீசார் விசாரணை திமுக
    'அம்மா மினி கிளினிக் இனி கிடையாது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்  தமிழ்நாடு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 12 தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் காற்று மாசு - தரக்குறியீடு 100ஐ தாண்டியதாக தகவல் காற்று மாசுபாடு

    பருவமழை

    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்  சுற்றுலா
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  ஹிமாச்சல பிரதேசம்
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  சென்னை
    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை

    குடிநீர்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு  தேனி
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு   ராமேஸ்வரம்
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார் தமிழ்நாடு

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025