Page Loader
வீடியோ:  மகாராஷ்டிராவில் கனமழைக்கு மத்தியில் தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை 

வீடியோ:  மகாராஷ்டிராவில் கனமழைக்கு மத்தியில் தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை 

எழுதியவர் Sindhuja SM
Jul 01, 2024
12:10 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் நேற்று, ஒரு முதலை ஆற்றில் இருந்து வெளியேறி, சாலையில் உலாவுவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் பீதி அடைந்தனர். ரத்னகிரியின் சிப்லுன் பகுதியில் உள்ள சாலையில் 8 அடி நீளமுள்ள முதலை ஒன்று சுற்றி திரிவது ஒரு வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த நகரின் ஊடாகப் பாயும் சிவன் நதியானது பல முதலைகளின் இருப்பிடமாக இருப்பதாகவும், கடும் மழைக்கு மத்தியில் அவற்றில் ஒன்று ஆற்றில் இருந்து வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா 

விஸ்வாமித்ரி ஆற்றில் இருந்து வெளியேறிய முதலை 

இந்த வீடியோவை சிப்லூனின் சின்சனாகா பகுதியில் உள்ள ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் படம்பிடித்துள்ளார். முன்னதாக, இதேபோன்ற ஒரு சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை பெய்தபோது நடந்தது. அப்போது ​​​​வதோதரா மக்கள் விஸ்வாமித்ரி ஆற்றின் அருகே சாலையில் முதலை ஒன்றைக் கண்டனர். வதோதராவின் விஸ்வாமித்ரி ஆற்றில் இருந்து 12 அடி முதலை வெளியேறியது. இது மழைக்காலத்தில் அப்பகுதியில் வழக்கமாக நடக்கும் ஒரு சம்பவமாகும். பின்னர் அந்த முதலை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை