NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலி - சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலி - சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம் 
    உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலி - சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு

    உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலி - சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 22, 2023
    01:25 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியினப்பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியானநிலையில், அதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகிறது.

    இதன் எதிரொலியாக தற்போது INDIA கூட்டணிக்கட்சிகள் மத்திய அரசினை கண்டித்து நாடாளுமன்றம் வளாகத்தில் வரும் திங்கட்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    மேலும், நாளை(ஜூலை.,23)சென்னையில் தாய்மையினை அவமதிக்கும் செயலினை தடுக்க பாஜக அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து எம்.பி.கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திமுக அறிவித்துள்ளது.

    தொடர்ந்து, மற்ற கட்சிகள் தரப்பிலும், மகளிர் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்க முடிவுச்செய்துள்ளதாக தெரிகிறது.

    அதன்படி,நேற்றுமுன்தினம் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலையருகே நள்ளிரவு நேரத்தில் மணிப்பூர் சம்பவத்தினை எதிர்த்து தடைகளைமீறி மே17 இயக்கம் போராட்டத்தினை நடத்தியுள்ளது.

    போராட்டம் 

    மெரினா மணல் பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் 

    இதன் காரணமாக அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 50 பேரினை காவல்துறை கைது செய்து, அவர்கள்மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவும் செய்துள்னனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் சென்னை மெரினாவில் ஒன்று கூடி போராட்டம் நடத்தலாம் என்னும் ஓர் அழைப்பு இணையத்தில் பரவுவதாக உளவுத்துறை எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளதாம்.

    இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் வழக்கத்தினை விட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

    4 நபர்களுக்கு மேல் ஒன்றாக வந்தால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னரே கடற்கரை பகுதிக்குள் அனுமதிக்கிறார்களாம்.

    போராட்டக்காரர்கள் கடற்பகுதியில் ஒன்றுகூடி விடாமல் தடுக்க போலீசார் மணல் பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மெரினா கடற்கரை
    மணிப்பூர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    சென்னை அரசு மருத்துவமனையில், குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரம்; மருத்துவமனை விளக்கம் அரசு மருத்துவமனை
    அடுத்த 2 மணிநேரத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம்
    ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்ய முடிவு தமிழகம்
    மெட்ரோ பணிகள் காரணமாக, மெரினா கடற்கரை சாலையில் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம் மெட்ரோ

    மெரினா கடற்கரை

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மகாபலிபுரம்
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார் சென்னை
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு கமலஹாசன்
    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம் சென்னை

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  கலவரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025