NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய தேர்தலில் சட்டவிரோத குடியேறிகளின் தலையீடு குறித்து துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கவலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய தேர்தலில் சட்டவிரோத குடியேறிகளின் தலையீடு குறித்து துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கவலை
    இந்திய தேர்தலில் சட்டவிரோத குடியேறிகளின் தலையீடு குறித்து துணை குடியரசுத் தலைவர் கவலை

    இந்திய தேர்தலில் சட்டவிரோத குடியேறிகளின் தலையீடு குறித்து துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கவலை

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 22, 2025
    07:56 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் சட்டவிரோத குடியேறிகள் தலையிடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கவலை தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

    டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தின் 65வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், சட்ட உரிமைகள் இல்லாத கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவில் வசித்து வருவதாகவும், கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி போன்ற துறைகளில் தேசிய வளங்களை நுகர்வதாகவும் கூறினார்.

    சமீபத்தில் அமெரிக்காவால் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டதைக் குறிப்பிட்டு, இந்தியா எப்போது இதேபோன்ற செயல்முறையைத் தொடங்கும் என்று தன்கர் கேள்வி எழுப்பினார்.

    மதமாற்றம்

    மதமாற்றம் குறித்து கவலை

    இந்தியாவின் மக்கள்தொகை கட்டமைப்பை மாற்றும் நோக்கத்துடன் தூண்டுதல்கள் மூலம் மத மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, துணை குடியரசுத் தலைவர் மத மாற்றங்கள் குறித்தும் கவலைகளை எழுப்பினார்.

    வாக்காளர் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் USAID நிதியுதவி செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

    இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த தன்கர், கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் பொருளாதார உயர்வு, உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடு கடைக்கோடி வரை சென்றடைந்திருப்பதை பாராட்டினார்.

    அரசாங்கக் கொள்கைகளால் சிறிய நகரங்களில் கூட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ந்து வருவதாகவும், வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் இலக்கை அடைவதில் தேசியவாதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தேர்தல்
    குடியரசு தலைவர்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    இந்தியா

    அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் துளசி கபார்டை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மோடி
    திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு இசட்-வகை பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு தலாய் லாமா
    மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு மணிப்பூர்
    பீகாரில் குடிகார கணவனை விட்டுவிட்டு கடன் வசூலிக்க வந்தவருடன் ஜூட் விட்ட மனைவி பீகார்

    தேர்தல்

    அமெரிக்க தேர்தல் முடிவுகள்: அடுத்த அதிபர் யார் என்று எப்போது தெரியும்? அமெரிக்கா
    அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாறு படைத்த இந்திய அமெரிக்கர்கள்; அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 6 இடங்களில் வெற்றி அமெரிக்கா
    ஜார்க்கண்ட் தேர்தல் 2024: 43 இடங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு; 638 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் ஜார்கண்ட்
    2026 சட்டசபை தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணியா? விஜய்யின் தவெக கூறுவது என்ன? தவெக

    குடியரசு தலைவர்

    ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிளாக் ஃப்ரைடே- வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை அமெரிக்கா
    அமெரிக்காவில் பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு துப்பாக்கி சூடு
    பென்டகன், வெள்ளை மாளிகையை உளவு செயற்கைக்கோள் படம் பிடித்ததாக கூறும் வட கொரியா  வட கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025