NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு 
    சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

    சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jun 21, 2023
    02:27 pm

    செய்தி முன்னோட்டம்

    விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் குறிப்பிட்ட பிரிவினரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஜூன்-7ம் தேதி சீல் வைக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து, மீண்டும் கோயிலினை திறக்கவேண்டும் என்று கோரி விழுப்புரம் கரிப்பாளையம் பகுதியினை சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் அளித்த புகார் மனுவில், குறிப்பிட்ட பிரிவினரை கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்படவில்லை, தீண்டாமையும் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

    கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டது.

    ஆனால், தற்போது அதுவுமில்லாமல் ஆகமத்தை மீறி சீல் வைக்கப்பட்டுள்ளது.

    சட்ட-ஒழுங்கினை காரணம் காட்டி கோயிலுக்கு சீல்வைக்க அரசுக்கு அனுமதியில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    சீல் 

    சட்ட-ஒழுங்கு பிரச்சனை நடப்பதால் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது - நீதிபதிகள் 

    இந்த மனுவானது நீதிபதிகள் முன்னர் இன்று(ஜூன்.,21)விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், அறநிலையத்துறை மூலம் கோயிலுக்கு தக்காரை நியமித்தும் அவரால் அந்த கோயிலில் பொறுப்பேற்க முடியவில்லை என்றும், கோயில் திருவிழாவின் போது குறிப்பிட்ட பிரிவினை சேர்ந்தவரை கோயிலுக்குள் அனுமதிக்காமல் அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.

    இதனை கேட்டறிந்த நீதிபதிகள், நடந்த பிரச்சனை குறித்து விசாரணை நடந்து வருவதால் இந்த விவகாரத்தில் அறநிலைத்துறை தான் முடிவு எடுக்க முடியும்.

    எனவே இது குறித்து மனுதாரர் அறநிலையத்துறையினை அணுகலாம் என்று தெரிவித்தனர்.

    மேலும் சட்ட-ஒழுங்கு பிரச்சனை நடப்பதால் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது என்று மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் விண்ணப்பத்தினை சட்டப்படி பரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விழுப்புரம்
    தமிழக அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் போராட்டம்
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு

    தமிழக அரசு

    தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம்  தமிழ்நாடு
    ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  தமிழ்நாடு
    தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் 80,000 பேர் விண்ணப்பம் - தமிழக அரசு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025