வீடியோ: பஞ்சாப் மாநிலத்தில் திடீரென்று மேம்பாலம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
பஞ்சாப்பின் லூதியானாவில் உள்ள கன்னா பகுதிக்கு அருகே இருக்கும் மேம்பாலத்தில் இன்று எரிபொருள் டேங்கர் லாரி ஒன்று டிவைடரில் மோதி கவிழ்ந்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட அடர்ந்த புகை மூட்டத்தால் மேம்பாலம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சிவில் மற்றும் போலீஸ் நிர்வாகத்துடன் நான்கைந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தீயை அணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதுவரை, யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ட்ஜ்கவ்
மேம்பாலத்திற்கு அருகே போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது
"மேம்பாலத்தில் உள்ள டிவைடரில் மோதி ஒரு எண்ணெய் டேங்கர் தீப்பிடித்து எரிந்ததாக மதியம் 12.30 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது. சிவில் மற்றும் போலீஸ் நிர்வாகத்துடன் 4-5 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தன. நிலைமை கட்டுக்குள் உள்ளது. போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது." என்று எஸ்எஸ்பி கண்ணா அம்னீத் கொண்டல் கூறியுள்ளார்.
லூதியானா மற்றும் பாட்டியாலாவில் 8 டிகிரி செல்சியஸுக்கு குறைவான வெப்பநிலை பதிவானதுடன், பஞ்சாபின் பல பகுதிகளில் குளிர் காலநிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்ற வெப்பநிலைகள் அண்டை நாடான ஹரியானாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
தீ பிடித்து எரியும் மேம்பாலம்
#NewsAlert | A massive fire erupted at a flyover near the Khanna area in Punjab's #Ludhiana today.
— NDTV (@ndtv) January 3, 2024
More details awaited. pic.twitter.com/YlfCE0ObRi