NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 7வது நாளாக தொடரும் உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப் பணி: சிக்கியுள்ள 41 தொழிலாளர்ளுக்கு என்ன ஆகும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    7வது நாளாக தொடரும் உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப் பணி: சிக்கியுள்ள 41 தொழிலாளர்ளுக்கு என்ன ஆகும்?
    இதுவரை 24 மீட்டர் இடிபாடுகளை மட்டுமே மீட்புக் குழுவினரால் அகற்ற முடிந்தது.

    7வது நாளாக தொடரும் உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப் பணி: சிக்கியுள்ள 41 தொழிலாளர்ளுக்கு என்ன ஆகும்?

    எழுதியவர் Sindhuja SM
    Nov 18, 2023
    12:22 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சி இன்று காலை மீண்டும் தொடங்கியது.

    ஆனால், தற்போதைக்கு தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    7 நாட்காளாக அந்த தொழிலாளர்களை மீட்க மீட்பு குழுக்கள் அதிநவீன ட்ரில்லிங் இயந்திரங்களை வைத்து பாறைகளில் துளையிட்டு வந்தனர்.

    எனினும், தோண்டும் பணி நடந்து கொண்டிருக்கும் போது பாதியிலேயே அந்த சுரங்கப்பாதை மீண்டும் மீண்டும் இடிந்து விழுந்ததால், இதுவரை துளையிடும் பணியை முழுமையாக முடிக்க முடியவில்லை.

    இந்நிலையில், நேற்று 3 அடி அகலம் உள்ள ஒரு குழாயின் வழியாக தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், நேற்று திடீரென்று மீட்பு பணி நடக்கும் இடத்தில் பெரும் சத்தம் கேட்டதால், மீட்பு பணிகள் நேற்று மதியம் நிறுத்தப்பட்டது.

    ட்ஜ்க 

    செங்குத்தாக துளையிடுவது குறித்து ஆய்வு 

    மீண்டும் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விடக்கூடாது என்பதற்காக நேற்று அவசர அவசரமாக மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

    எனினும், சுரங்கப்பாதைக்குள் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் இருந்து இதுவரை 24 மீட்டர் இடிபாடுகளை மட்டுமே மீட்புக் குழுவினரால் அகற்ற முடிந்தது.

    அமெரிக்க ஆஜர் இயந்திரத்தின் மூலம் ட்ரில்லிங் வேலை நடந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 25 டன் எடையுள்ள அமெரிக்க தயாரிப்பு இயந்திரம் இந்தூரில் இருந்து உத்தரகாண்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    கிடைமட்ட துளையிடல் வெற்றிபெறவில்லை என்பதால், சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஒரு சிறப்பு குழு தற்போது ஆய்வு செய்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    விபத்து

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    விபத்து

    கார் விபத்தில் சிக்கிய ஷாருக்கான் பட நடிகை காயத்ரி; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்  இத்தாலி
    பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து யூடியூபர்
    Autombile Safety Tips : கார் விபத்தில் ஏர்பேக்கினால் ஏற்படும் காயத்தைத் தவிர்ப்பது எப்படி? கார்
    அத்திப்பள்ளி பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றம்- கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல் கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025