NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்காரலாம்": IIT பாம்பேவில் அடுத்த சர்ச்சை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்காரலாம்": IIT பாம்பேவில் அடுத்த சர்ச்சை 
    விடுதி மாணவர்கள் சிலர் அசைவ உணவு உண்பவர்களிடம் இடத்தை காலி செய்யும்படி வற்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    "சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்காரலாம்": IIT பாம்பேவில் அடுத்த சர்ச்சை 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 30, 2023
    06:39 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக(ஐஐடி) விடுதி கேண்டீனில் அசைவ உணவு சாப்பிட்டதற்காக மாணவர் ஒருவரை மற்றொரு மாணவர் அவமானப்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த வாரம், 12ஆம் நம்பர் விடுதியின் கேன்டீனில் இந்த சம்பவம் நடந்ததாக ஐஐடி போவாய்யில் படிக்கும் மாணவர் ஒருவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

    IIT விடுதியில் உள்ள சில மாணவர்கள் கேண்டீன் சுவர்களில் "சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்காரலாம்" என்று சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர் என்றும் அந்த மாணவர் கூறியுள்ளார்.

    மேலும், விடுதி மாணவர்கள் சிலர் அசைவ உணவு உண்பவர்களிடம் இடத்தை காலி செய்யும்படி வற்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    பிஜு

    "இது அவமானகரமானது": ட்விட்டரில் மாணவர்கள் புகார் 

    "மூன்று மாதங்களுக்கு முன்பு, மாணவர்கள் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்ட மனுவின் மூலம், IITயில் அதிகாரப்பூர்வ உணவுப் பிரிப்புக் கொள்கை எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஆனால், மாணவர்கள் உண்ணும் உணவின் அடிப்படையில் அவர்களுக்கு வெவ்வேறு இருக்கைகள் வழங்கும் நடைமுறை இன்னும் IITயில் உள்ளது." என்று அந்த மாணவர் கூறியுள்ளார்.

    இது குறித்து ட்விட்டரில் புகார் அளித்திருக்கும் சில மாணவர்கள், "இது அவமானகரமானது" என்று தெரிவித்துள்ளனர்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அம்பேத்கர் பெரியார் புலே ஆய்வு வட்டம் (APPSC), "சுத்தம் என்று கூறி தனித்தனி உணவு இடங்களை வரையறுப்பதன் அவசியம், கல்லூரியில் உள்ள பிராமணர்களின் மேன்மையை வலுப்படுத்துவதற்காக மட்டுமே." என்று குற்றம்சாட்டியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    அம்பேத்கர் பெரியார் புலே ஆய்வு வட்டத்தின் ட்விட்டர் பதிவு 

    Even though RTIs and mails for hostel GSec shows that there is no institute policy for food segregation, some individuals have taken it upon themselves to designate certain mess areas as "Vegetarians Only" and forcing other students to leave that area.#casteism #Discrimination pic.twitter.com/uFlB4FnHqi

    — APPSC IIT Bombay (@AppscIITb) July 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐஐடி
    மும்பை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஐஐடி

    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  மும்பை
    முதல் முறையாக, ஆப்பிரிக்காவின் தான்சானியாவில், சென்னை ஐஐடி! சென்னை

    மும்பை

    ரூ.11.6 கோடி நன்கொடையாக வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத நபர் இந்தியா
    இந்தியாவின் அம்பானி, டாடா, பிர்லா போன்றோர் வசிக்கும் இடங்கள் எங்கே எனத்தெரியுமா? இந்தியா
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பாதுகாப்பு துறை
    ஐஐடி தலித் மாணவர் தற்கொலை: நியாயம் கோரும் மாணவர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025