NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தக்காளி, பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தக்காளி, பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு 
    தக்காளி, பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு

    தக்காளி, பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு 

    எழுதியவர் Nivetha P
    Jul 02, 2023
    11:24 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் கோடை காலம் மற்றும் கனமழை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் வரத்து குறைந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்துவரும் தக்காளி சில்லரை கடைகளில் 1 கிலோ ரூ.90லிருந்து ரூ.110வரை விற்பனையானது.

    இந்த திடீர் விலை உயர்வினை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியக்கருப்பன் தெரிவித்ததையடுத்து, தமிழக அரசு பசுமைப்பண்ணை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதனிடையே இன்று(ஜூலை.,2)மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.90க்கு விற்பனையான தக்காளி இன்று ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-130வரை விற்கப்படுகிறது.

    வரத்துக்குறைவு காரணமாக பெங்களூர்,ஓசூர் பகுதிகளிலிருந்து தக்காளி விற்பனைக்காக வருகிறது.

    காய்கறி 

    வரலாறு காணாத விலை உயர்வு 

    இதனை தொடர்ந்து பீன்ஸ் விலையும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து மிளகாய் விலையானது வரலாறு காணாத அளவிற்கு 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.50க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.180க்கு விற்கப்படுகிறது.

    நாட்டுக்கத்திரிக்காய் ஒரு கிலோ ரூ.120க்கும், கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்ட இஞ்சியின் விலை தற்போது ரூ.240க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் கேரட் ஒரு கிலோ ரூ.90, வரிகத்திரி ரூ.60, வெள்ளரிக்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.35, புடலங்காய் ரூ.50, இளவங்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.50, பல்லாரி ரூ.29, பூண்டு ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

    காய்கறிகளின் கடும் விலை உயர்வால் இல்லத்தரசிகள் மற்றும் உணவகங்கள் நடத்துவோர் வேதனைக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோடை காலம்
    சென்னை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கோடை காலம்

    யாருக்கெல்லாம் குல்ஃபி பிடிக்கும்! டேஸ்ட் அட்லஸில் 14வது இடத்தைப் பிடித்த குல்ஃபி!  வெப்ப அலைகள்
    ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100யை தாண்டியது - பொதுமக்கள் அதிர்ச்சி  சென்னை

    சென்னை

    கிண்டி மருத்துவமனை: முதலமைச்சர் ஸ்டாலின் திறக்கப்போகிறாரா? திரௌபதி முர்மு
    சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு மெட்ரோ
    மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க நவீனமயமாக்கப்படும் சென்னை பள்ளிகள்  பள்ளி மாணவர்கள்
    தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி லேப்டாப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025