NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் 
    சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

    சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் 

    எழுதியவர் Nivetha P
    Aug 22, 2023
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சராமரியாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம் பகுதியினை சேர்ந்த மீனவர்கள் செந்தில் அரசன் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரும் தங்களது சொந்த படகுகளில் நேற்று(ஆகஸ்ட்.,21)மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

    2 படகுகளில் மொத்தம் 7 பேர் மீன்பிடிக்க சென்ற நிலையில், ஆறுகாட்டுத்துறை கடற்கரை அருகே தென்கிழக்கு பகுதியில் சுமார் 22 மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே நேற்று இரவு 3 பைபர் படகில் 9 பேர் கொண்ட இலங்கை கடற்படை கும்பல் திடீரென இவர்களது படகுகளை சுற்றிவளைத்துள்ளது.

    தாக்குதல் 

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 6 மீனவர்கள் 

    கத்தி, இரும்புக்கம்பி, கட்டைகள் போன்ற ஆயுதங்களை வைத்திருந்த அந்த கும்பல் தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    மேலும், படகில் வைக்கப்பட்டிருந்த 800 கிலோ எடைகொண்ட மீன்பிடி வலை, பேட்டரி லைட், திசைகாட்டும் கருவி, போன்ற கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து விட்டு, மீனவர்களை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தினையடுத்து பலத்த காயங்களுடன் வேதாரண்யம் சென்றடைந்த மீனவர்கள் 7 பேரில் 6 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்களாம்.

    குறிப்பாக பாஸ்கர் என்பவருக்கு 21 தையல் போடப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    கடற்படை
    கடற்கரை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025