NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிஜேபியால் நிராகரிக்கப்பட்ட பின்னர், தொகுதி மக்களுக்கு வருண் காந்தி எழுதிய கடிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிஜேபியால் நிராகரிக்கப்பட்ட பின்னர், தொகுதி மக்களுக்கு வருண் காந்தி எழுதிய கடிதம்
    சாமானியர்களுக்காக தொடர்ந்து வாதிட போவதாக உறுதியளித்தார் வருண் காந்தி

    பிஜேபியால் நிராகரிக்கப்பட்ட பின்னர், தொகுதி மக்களுக்கு வருண் காந்தி எழுதிய கடிதம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 28, 2024
    05:24 pm

    செய்தி முன்னோட்டம்

    பிலிபித் தொகுதியில் இருந்து சீட் மறுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அந்த தொகுதியின் பாஜக எம்பி வருண் காந்தி, பிலிபிட் மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    தனது கடிதத்தில், வருண் காந்தி 1983ஆம் ஆண்டு சிறுவயதில் உத்தரபிரதேசத்தில் உள்ள பிலிபிட் நகருக்கு தனது முதல் வருகையை நினைவு கூர்ந்தார்.

    மேலும் தனது அரசியல் பயணம் முழுவதும் மக்களிடமிருந்து தனக்கு கிடைத்த நிலையான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

    பிலிபிட் உடனான தனது உறவு, தனது கடைசி மூச்சு வரை தொடரும் என்று கூறிய அவர், சாமானியர்களுக்காக தொடர்ந்து வாதிட போவதாக உறுதியளித்தார்.

    ஏமாற்றம்

    தான் ஏமாற்றப்பட்டதை போல உணர்ந்ததாக வருண் காந்தி வருத்தம்

    முன்னதாக மார்ச் 22 அன்று, BJPயின் ஐந்தாவது சுற்று வேட்பாளர் அறிவிப்புகளில், வருண் காந்திக்கு பதிலாக உத்தரப் பிரதேச அமைச்சர் ஜிதின் பிரசாத் அந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்புக்கு பிறகு, வருண் காந்தி "ஏமாற்றப்பட்டதாக" உணர்ந்ததை ஒப்புக்கொண்டார்.

    இருப்பினும், அவரது தாயாரும், சுல்தான்பூர் எம்பியான மேனகா காந்திக்கு, மீண்டும் சுல்தான்பூர் தொகுதியில் நிற்க பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.

    கடந்த மூன்று தசாப்தங்களில், பிலிபித் தொகுதியில் தாய்-மகன் இருவரும் போட்டியிடாதது இதுவே முதல் முறை.

    "எம்.பி.யாக எனது பதவிக்காலம் முடிவடைந்தாலும், பிலிபித்துடனான எனது உறவை, எனது இறுதி மூச்சு வரை நிறுத்தமுடியாது. எம்.பி.யாக இல்லாவிட்டாலும், ஒரு மகனாக, என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்" எனக்கூறியுள்ளார்.

    embed

    வருண் காந்தி எழுதிய கடிதம்

    प्रणाम पीलीभीत 🙏 pic.twitter.com/D6T3uDUU6o— Varun Gandhi (@varungandhi80) March 28, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    பாஜக

    தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தல்
    2 நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    வரும்..ஆனா வராது: அதிமுகவிற்கு பாஜக தலைவர்கள் மாறினார்களா? அதிமுக
    முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவையும், எம்ஜிஆர்யும் புகழ்ந்த மோடி பிரதமர் மோடி

    உத்தரப்பிரதேசம்

    உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து: 1 குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி  விபத்து
    'திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை': நீதிமன்றம்  சட்டம் பேசுவோம்
    தனது மருமகனை அரசியல் வாரிசாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தேர்தல்
    அயோத்தி ராமர் கோயில்- ஆயிரம் ஆண்டுகளுக்கு புணரமைப்பு தேவைப்படாது, 6.5 அளவிலான பூகம்பத்தையும் தாங்கும் உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025