NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து 
    பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து

    பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து 

    எழுதியவர் Nivetha P
    Jul 26, 2023
    12:28 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பல்லவன், வைகை உள்ளிட்ட விரைவு ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதோடு, சில ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, திருச்சியிலிருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில் சேவைகள் இன்று(ஆகஸ்ட்.,26) முதல் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

    மதுரை-சென்னை காலை.7.10 மணிக்கு புறப்படும் வைகை விரைவு ரயிலானது(வண்டி.எண்.,12636) ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து, கோவை-மயிலாடுதுறை செல்லும் ஜன்-சதாப்தி ஜூலை 30,31 தேதிகளில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் நாகர்கோயில்-மும்பை இயங்கும் விரைவு ரயில், கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியே இயக்கப்படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    ரயில் சேவை 

    தேஜஸ் விரைவு ரயில் ஆகஸ்ட் 1ம் தேதி பொன்மலையில் இருந்து புறப்படும் 

    சென்னை-எழும்பூர் இடையே இயங்கும் பல்லவன் விரைவு ரயில்(வண்டி.எண்.,12605) முழுவதுமாக ஆகஸ்ட்.,1 ரத்து செய்யப்படுகிறது.

    மதுரை-சென்னை எழும்பூர் இடையே இயங்கும் தேஜஸ் விரைவு ரயில் ஆகஸ்ட் 1ம் தேதி பொன்மலையில் இருந்து புறப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, கச்சிகுடா-மதுரை இடையே இயங்கும் விரைவு ரயில் ஜூலை 31ம் தேதி விழுப்புரத்திலேயே நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதே நாளில் இந்த ரயில் மதுரையிலிருந்து கிளம்புவதற்கு பதில் விழுப்புரத்திலிருந்து காலை 10.40மணிக்கு புறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சென்னை-திருச்சி இடையே இயங்கும் ராக்போர்ட் விரைவு ரயில் ஜூலை 30, 31ம் தேதிகளிளும், சோழன் விரைவு ரயில் ஜூலை.,30,31 மற்றும் ஆகஸ்ட்.,1ம் தேதி பொன்மலையோடு நிறுத்தப்படுவதோடு, இத்தேதிகளில் பொன்மலையில் இருந்தபடி 10.25க்கு கிளம்பி சென்னை சென்றடையும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    ரயில்கள்
    சென்னை
    மதுரை

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் கோவில்கள்

    ரயில்கள்

    வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம் வந்தே பாரத்
    விரைவு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை அறிவிப்பு  இந்தியா
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!  வந்தே பாரத்
     சென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு சென்னை

    சென்னை

    அரசு மருத்துவர்களின் வருகை நேரத்தினை கண்காணிக்க சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு  அரசு மருத்துவமனை
    சென்னை அண்ணா சாலையில் ரூ.621கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் - அரசாணை வெளியீடு  தமிழக அரசு
    சென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை - வருமானவரி நுண்ணறிவு பிரிவு திருச்சி
    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  ஜி20 மாநாடு

    மதுரை

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வரும் 11ம் தேதி பால் நிறுத்த போராட்டம் அறிவிப்பு தமிழ்நாடு
    மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் தமிழ்நாடு
    ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள் இந்தியா
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை மாவட்ட செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025