NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு
    வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு
    இந்தியா

    வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    September 07, 2023 | 04:54 pm 1 நிமிட வாசிப்பு
    வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு
    வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீ ரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு

    வைகை எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலானதுm இனி திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. வைகை எக்ஸ்பிரேஸ் ரயில் சேவை துவங்கியதிலிருந்தே ஸ்ரீரங்கம் மக்கள் கோரி வந்த கோரிக்கையானது இன்று(செப்.,7) தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு மூலம் நிறைவேறியுள்ளது என்றே கூறலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் செப்டம்பர் 16ம் தேதி முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வைகுண்ட ஏகாதேசி தினங்களை முன்னிட்டு மட்டும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மேலும் சில நிறுத்தங்கள்

    சென்னை எழும்பூரிலிருந்து மதியம் 1.20க்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான் உள்ளிட்ட வழித்தடங்கள் வழியே மதுரைக்கு இரவு 9.25க்கு சென்றடையும். அதனையடுத்து, மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 2.40க்கு வந்து சேரும் என்பது குறிப்பிடவேண்டியவை. இதனை தொடர்ந்து, மலைக்கோட்டை விரைவு ரயில், கல்லக்குடி, பழங்காந்தகம் ரயில் நிலையத்தில் இனி நின்று செல்லும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல், புகழூர் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை-மைசூரு விரைவு ரயில் நின்று செல்லும். மேலும், மன்னார்குடி-சென்னை எழும்பூர் விரைவு ரயில் இனி கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் நிற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    திருச்சி
    சென்னை
    தெற்கு ரயில்வே
    மதுரை

    திருச்சி

    மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள் தமிழ்நாடு
    தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு முதல் அமைச்சர்
    திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விழுந்தது  அறநிலையத்துறை
    திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட திருச்சி ஏர் இந்தியா விமானம் கேரளா

    சென்னை

    கோயம்பேடில் காய்கறி விலை சரிவு; மக்கள் மகிழ்ச்சி  இந்தியா
    தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு - மத்திய இணையமைச்சர் பாராட்டு மத்திய அரசு
    இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம் உணவு குறிப்புகள்
    பிரபல குணசித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி மரணம் சினிமா

    தெற்கு ரயில்வே

    10 பேரை கொன்ற மதுரை ரயில் நிலைய தீ விபத்து, எப்படி நடந்ததது? மதுரை
    பழங்கால நீராவி ரயில் என்ஜின் வடிவில் புதிய சுற்றுலா ரயில் அறிமுகம்  இந்திய ரயில்வே
    55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம்  இந்தியா
    தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே தமிழ்நாடு

    மதுரை

    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  சுற்றுலா
    மதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்  மல்லிகார்ஜுன் கார்கே
    மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி அதிமுக
    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023