NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்புக் குழுவினருக்குத் தலா ரூ.50,000 ஊக்கத் தொகை
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்புக் குழுவினருக்குத் தலா ரூ.50,000 ஊக்கத் தொகை
    மீட்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்புக் குழுவினருக்குத் தலா ரூ.50,000 ஊக்கத் தொகை

    எழுதியவர் Sindhuja SM
    Nov 30, 2023
    08:54 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒவ்வொரு பணியாளருக்கும் ரூ.50,000 ரொக்கம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

    கடந்த நவம்பர் 12ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கப்பாதைக்குள்ளேயே சிக்கி கொண்டனர்.

    இந்நிலையில், 17 நாட்கள் நடந்து வந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

    டோரிஸிஸ்ட்ஜ்

    சிக்கியிருந்த தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

    இதனையடுத்து, 17 நாட்களாக சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியிருந்து மீட்கப்பட்ட மீட்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    "தொழிலாளர்கள் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் ஒரு முறை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சிக்கிய தொழிலாளர்களுக்கு நான் அறிவித்த ரூ.1 லட்சம் காசோலைகளாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் சுரங்கப்பாதைக்குள் நுழைந்து, தோண்டும் பணியில் பங்கேற்ற மீட்புப் பணியாளர்களுக்கு மாநில அரசிடமிருந்து 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்." என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.

    மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட எலி துளை சுரங்க நிபுணர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் தாமி அறிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உத்தரகாண்ட்

    கன்வார் யாத்திரை: ஹரித்வாரில் 30,000 டன் குப்பைகள் குவிந்துள்ளன இந்தியா
    உத்தரகாண்ட்: மின்மாற்றி வெடித்ததால் ஒரே நேரத்தில் 15 பேர் பலி காவல்துறை
    கேதர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி, 19 பேர் மாயம் நிலச்சரிவு
    உத்தரகாண்டில் கனமழை: கடும் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கல்லூரி கட்டிடம் கனமழை

    இந்தியா

    காந்தாரா அத்தியாயம்1 டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது கன்னட படங்கள்
    இந்திய தூதரை வழி மறித்து தகராறு செய்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்: நியூயார்க்கில் பரபரப்பு  அமெரிக்கா
    ஆப்பிளின் இலக்கை எட்ட ஓசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆப்பிள்
    CCI-யின் முடிவு மீதான கூகுளின் மேல்முறையீட்டு இறுதி விசாரணையை தள்ளிவைத்தது NCLAT கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025