NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வாசகத்தை மட்டும் எழுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உத்தர பிரதேச மாணவர்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வாசகத்தை மட்டும் எழுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உத்தர பிரதேச மாணவர்கள் 

    "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வாசகத்தை மட்டும் எழுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உத்தர பிரதேச மாணவர்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 27, 2024
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் (விபிஎஸ்பி) பல்கலைக்கழகத்தில் 18 முதலாம் ஆண்டு மருந்தக மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று மட்டும் எழுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.

    தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் மூலம் இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

    பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் பணத்தை வாங்கிக்கொண்டு மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்கள் வழங்கியது தெரியவந்துள்ளது.

    விபிஎஸ்பி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் திவ்யன்சு சிங், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ஆர்டிஐ தாக்கல் செய்தார்.

    விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து மாணவர்களின் பட்டியல் எண்களை வழங்க வேண்டும் என்று அவர் அதில் கோரி இருந்தார்.

    இந்தியா 

    இரண்டு பேராசிரியர்கள் இடைநீக்கம் 

    அவரது கோரிக்கையின் பேரில் மறுமதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற வாசகத்தை தவிர, ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா போன்ற கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் மட்டுமே இருந்திருக்கின்றன.

    அந்த விடைத்தாள்களில் வேறு எதுவுமே எழுதப்படவில்லை.

    இந்த தகவல் வெளியானதும், இந்த ஊழலில் தொடர்புடைய வினய் வர்மா மற்றும் ஆஷிஷ் குப்தா ஆகிய இரண்டு பேராசிரியர்களை பல்கலைக்கழகம் உடனடியாக இடைநீக்கம் செய்தது.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த துணைவேந்தர் வந்தனா சிங், "மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே நாங்கள் ஒரு குழுவை அமைத்தோம். அந்த கமிட்டி தனது அறிக்கையில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது" என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு
    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்

    உத்தரப்பிரதேசம்

    அயோத்தி ராமர் கோயில்- ஆயிரம் ஆண்டுகளுக்கு புணரமைப்பு தேவைப்படாது, 6.5 அளவிலான பூகம்பத்தையும் தாங்கும் உச்ச நீதிமன்றம்
    Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது? பாஜக
    கிருஷ்ணர் ஜென்மபூமி வழக்கு: மதுராவில் உள்ள மசூதியை ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒப்புதல் உயர்நீதிமன்றம்
    "உயிரை மாய்த்து கொள்ள அனுமதி வேண்டும்": உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்த பெண் நீதிபதி உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025