NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உ.பி.யில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடித்து கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    உ.பி.யில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடித்து கொலை
    அனைத்து உடல்களிலும் தலையில் காயங்கள் இருந்தன

    உ.பி.யில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடித்து கொலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 10, 2025
    09:42 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்கள் வீட்டிற்குள் இறந்து கிடந்தனர்.

    பலியானவர்களில் ஒரு ஆண், அவரது மனைவி மற்றும் அவர்களது மூன்று மகள்கள், அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள்.

    இறந்த தம்பதியினரின் உடல்கள் தரையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், குழந்தைகளின் உடல்கள் படுக்கைப் பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்டன.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, அனைத்து உடல்களிலும் தலையில் காயங்கள் இருந்தன.

    அதை பார்க்கும்போது அவர்கள் கனமான பொருளால் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது என்றனர்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் முதல்கட்ட அவதானிப்புகளின் அடிப்படையில் இது தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை என தெரிகிறது என்றும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    விவரங்கள்

    விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறை

    புதன்கிழமை மாலை முதல் குடும்பத்தினர் வெளியே காணப்படவில்லை என சந்தேகித்த அக்கம்பக்கத்தினர், ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கக்கூடும் என காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    வீடு வெளியே பூட்டப்பட்டு கிடந்ததால், கூரை வழியாக காவல்துறையினர் உள்ளே இறங்கியுள்ளனர்.

    உள்ளே வீடு முற்றிலும் சீர்குலைந்து கிடந்ததையும், இறந்தவர்களின் உடல்களும் தரையில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    படுக்கைப் பெட்டிக்குள் சாக்கு மூட்டையில் இளைய குழந்தையின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.

    தற்போது தடயவியல் குழுக்கள் வீட்டை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த பயங்கரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ள சூழ்நிலைகளை வெளிக்கொணர போலீசார் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    கொலை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உத்தரப்பிரதேசம்

    மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட பிறந்த குழந்தை பலி இந்தியா
    திருட சென்ற வீட்டில் AC போட்டுவிட்டு மட்டையாகிய திருடனை எழுப்பி கைது செய்த போலீசார்  வாரணாசி
    வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி வாரணாசி
    போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது நாடாளுமன்ற அத்துமீறல்

    கொலை

    ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளி போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் தமிழ்நாடு
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர்: உண்மையை மறைக்க அரங்கேற்றப்பட்டதா? தமிழ்நாடு
    ஆந்திரா சிறுமி கற்பழிப்பு-கொலை: பள்ளி மாணவர்கள் ஆபாச கிளிப்களில் பார்த்ததை செயல்படுத்த முயன்றதாக வாக்குமூலம் ஆந்திரா
    ஒதுக்கீடு முறையை எதிர்த்து பங்களாதேஷில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் 39 பேர் கொல்லப்பட்டனர் பங்களாதேஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025