NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குரங்கம்மைக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஆய்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    குரங்கம்மைக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஆய்வு
    குரங்கம்மைக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலை குறித்து ஜே.பி.நட்டா ஆய்வு

    குரங்கம்மைக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஆய்வு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 18, 2024
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) குரங்கம்மை நோயைப் பரப்பும் Mpox வைரஸ் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

    ஜே.பி.நட்டா அதிகாரிகளுடனான கூட்டத்திற்கு தலைமை தாங்கி, நோய் பரவாமல் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் ஒரு குரங்கம்மை வைரஸ் பாதிப்பு கூட பதிவாகவில்லை. இந்த சந்திப்பின் போது, ​​தற்போது இந்தியாவிற்கு நீடித்த பரவலுடன் கூடிய பெரிய அளவிலான பாதிப்பு அபாயம் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டது.

    தற்போது ஆப்பிரிக்காவில் தீவிரமாக பரவியுள்ள இந்த தொற்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியாவிலும் பரவ தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உலக சுகாதார அவசரநிலை

    குரங்கம்மை நோயை உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிப்பு

    உலக சுகாதார நிறுவனம் (WHO) முன்னதாக குரங்கம்மை தீவிரமாக பரவத் தொடங்கிய 2022 காலகட்டத்தில் அதை கட்டுப்படுத்தும் விதமான உலக பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. எனினும் பின்னர் மே 2023இல் அதை ரத்து செய்தது.

    இந்நிலையில், தற்போது இந்த தொற்றுநோயின் பரவல் ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் மிகவும் அதிகமாக உள்ள நிலையில், WHO மீண்டும் உலக பொது சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.

    இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல்களில் ஆங்காங்கு வீக்கம், காய்ச்சல், தசைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    இதற்கென தனியாக சிகிச்சை முறை இல்லாத நிலையில், பெரியம்மை நோய்க்கான சில தடுப்பு மருந்துகள் இதற்காக சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குரங்கம்மை
    ஜே.பி.நட்டா
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    குரங்கம்மை

    ஆசியாவிலும் அடியெடுத்து வைத்த குரங்கம்மை; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன? வைரஸ்

    ஜே.பி.நட்டா

    கூட்டணி முறிவு: டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கும் அண்ணாமலை  பாஜக
    நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கனா ரனாவத்? பாஜக
    மீண்டும் ராஜ்ய சபா MP ஆகிறார் எல்.முருகன் மாநிலங்களவை
    சர்ச்சைக்குரிய பதிவிட்டதற்காக ஜேபி நட்டாவுக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ்  பாஜக

    இந்தியா

    ஒலிம்பிக் ஆர்டர்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உயரிய விருது வென்றார் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக்
    காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் திவால்; தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் அறிவிப்பு வணிகம்
    பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர்களின் முழு பட்டியல் பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
    அனைத்து காலநிலையையும் தாங்கி வளரக்கூடிய புதிய பயிர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி விவசாயிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025