NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர் 
    அமைச்சர் லார்ட் தாரிக் அகமது, இங்கிலாந்து விசா விதி மாற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர் 

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2023
    07:17 pm

    செய்தி முன்னோட்டம்

    நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, இங்கிலாந்து துணை வெளியுறவு அமைச்சர் லார்ட் தாரிக் அகமது, இங்கிலாந்து விசா விதி மாற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

    பிரிட்டன் அரசாங்கம் இந்திய மாணவர்களால் பயனடைந்துள்ளது என்றும் சமீபத்திய விசா தடைகள் ஓராண்டு ஆராய்ச்சி/முனைவர் பட்ட படிப்பு மாணவர்களுக்கு மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.

    "இளங்கலை படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக வரும் மாணவர்கள் எப்போதும் வரவேற்கப்படுவார்கள்" என்று லார்ட் அகமது NDTVக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறி இருக்கிறார்.

    "ஒரு வருடம் மட்டுமே வந்து சில சமயங்களில் தங்கள் ஆராய்ச்சியை முடிக்காமல் இருக்கும் ஆராய்ச்சி மற்றும் பிஎச்டி மாணவர்களுக்கான விசா விதிகளை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம்," என்று லார்ட் அகமது கூறினார்.

    details

    பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்: லார்ட் தாரிக் அகமது

    காலிஸ்தான் ஆதரவாளர்களின் சர்ச்சைக்குப் பிறகு, லார்ட் அகமது இந்தியாவிற்கு வந்திருப்பது இந்தியா-இங்கிலாந்து உறவுகளில் நேர்மறையான ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    "சட்டப்பூர்வ குடியேற்றத்தால் பிரிட்டன் பயனடைகிறது. மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்தவே நாங்கள் விரும்புகிறோம். பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு அதிகமான மாணவர்கள் தேவை," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்திக்க இன்று டெல்லிக்கு அவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த இங்கிலாந்து அமைச்சரின் இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தும்.

    இதற்காக, ஹைதராபாத்தில் ஒரு சிறப்பு கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு புதுமையான ஸ்டார்ட்-அப்களை அவர் நேரில் காணவுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்
    இங்கிலாந்து
    பிரிட்டன்

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    உலகம்

    அமெரிக்கா: சதை உண்ணும் போதைப்பொருளால் ஜாம்பியாக மாறும் மக்கள்  அமெரிக்கா
    ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமையை வழங்கியது தைவான்  தைவான்
    11,000 பேரை பணி நீக்கம் செய்யும் வோடபோன் நிறுவனம்.. ஏன்? வோடஃபோன்
    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா

    உலக செய்திகள்

    தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம் பாகிஸ்தான்
    அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது  பாகிஸ்தான்
    'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு  பாகிஸ்தான்
    போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும்  மலேசியா   உலகம்

    இங்கிலாந்து

    100 ஆண்டுகளுக்கு பின் பெறுநர் முகவரிக்கு வந்தடைந்த கடிதம் உலகம்
    கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடமே கொடுக்க வேண்டும்: அனல் பறக்கும் விவாதம் இந்தியா
    பிபிசிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் மோடி
    லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம் லண்டன்

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025