NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஐநா விருது வென்றது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்; இந்தியாவிற்கு மேலும் மூன்று விருதுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐநா விருது வென்றது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்; இந்தியாவிற்கு மேலும் மூன்று விருதுகள்
    மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

    ஐநா விருது வென்றது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்; இந்தியாவிற்கு மேலும் மூன்று விருதுகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 07, 2024
    06:23 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2024க்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு விருதை வென்றுள்ளது.

    தமிழகத்தில் 2021இல் பொறுப்பேற்ற திமுக அரசு, தொற்றா நோய்களான நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று சோதனை செய்து மருந்து வழங்கும் திட்டத்தை தொடங்கியது.

    இந்த திட்டத்தின் கீழ் பல லட்சக் கணக்கானோர் பயன்பெற்று வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தொற்றா நோய்களுக்கான நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு 2024ஆம் ஆண்டுக்கான விருதை மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அறிவித்துள்ளது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற சுகாதார ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவு

    Delighted to announce that #MakkalaiThediMaruthuvam, our #DravidianModel Government's pioneering healthcare scheme for the Indian subcontinent, has earned the prestigious @UN-AITF Award. With over 1.80 crore beneficiaries, this game-changing initiative is transforming lives by… pic.twitter.com/i8Zxr6cVdB

    — M.K.Stalin (@mkstalin) October 7, 2024

    14 விருதுகள்

    இந்தியாவுக்கு 4 விருதுகள்

    ஐநா சபையால் மூன்று பிரிவுகளில் மொத்தம் 14 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.இந்தியாவிற்கு மட்டும் நான்கு விருதுகள் வழங்கபட்டுள்ளன.

    இதில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிறப்பான சேவைகளை வழங்கியதற்காக தமிழக சுகாதாரைக்கு விருது வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் மூன்று நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத் திறனாளிகள் நலன் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதற்காக மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு (ஐசிஎம்ஆர்), உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான தேசிய நிறுவனம் ஆகியவற்றுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

    இது தவிர திருவனந்தபுரத்தில் உள்ள CDAC எனும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு பழங்குடியினருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உயர்தர மருத்துவ சிகிச்சையை கொண்டு சேர்த்ததற்காகவும் விருது வழங்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    சுகாதாரத் துறை
    மருத்துவம்
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    தமிழகம்

    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; மழை பெய்ய வாய்ப்புள்ளதா? வானிலை அறிக்கை
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி; அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி
    முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை
    மீண்டும் தலைவராக நடிகர் கமல்ஹாசன்; மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு ஒருமனதாக தேர்வு கமல்ஹாசன்

    சுகாதாரத் துறை

    நிபா வைரஸ் கட்டுக்குள் வந்ததால் கேரளா கோழிக்கோட்டில் நாளை பள்ளிகள் திறப்பு  நிபா வைரஸ்
    திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு  டெங்கு காய்ச்சல்
    தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல் கர்ப்பிணி பெண்கள்
    டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணிநேரத்தில் வழங்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு  தமிழக அரசு

    மருத்துவம்

    போலி மருத்துவத் தகவல் பகிர்வு குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்டிருக்கும் யூடியூப் யூடியூப்
    இந்திய மருத்துவ பட்டதாரிகள் இப்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் பயிற்சி பெறலாம் மருத்துவக் கல்லூரி
    48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலி: மகாராஷ்டிரா மருத்துவமனையில் பரபரப்பு  மகாராஷ்டிரா
    சென்னையில் நாளை இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம்  சென்னை

    இந்தியா

    வருமான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு வருமான வரி அறிவிப்பு
    பாதுகாப்பு குறைபாடு; வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அப்டேட் கொடுத்த ராயல் என்ஃபீல்டு ராயல் என்ஃபீல்டு
    இந்தியாவின் பொருளாதாரத்தை ₹5.9L கோடியாக உயர்த்த வரவிருக்கும் திருமண சீசன் திருமணங்கள்
    ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல் மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025