NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை 
    செய்திகளில் மேற்கோள் காட்டப்பட்ட அதிகாரி கோஹினூர் பற்றி குறிப்பிடவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை 

    எழுதியவர் Sindhuja SM
    May 15, 2023
    01:19 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து கோஹினூர் வைரம், இந்திய சிலைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்களை மீட்பதற்கு இந்தியா ராஜதந்திரத்தை பயன்படுத்தி வருவதாக பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்று அரசாங்க வட்டாரங்கள் மறுத்துள்ளன.

    பிரிட்டனில் இருந்து ஆயிரக்கணக்கான தொல்பொருட்களை மீட்டெடுப்பதற்காக இராஜதந்திர வளங்கள் திரட்டப்படுகின்றன என்பது உண்மையான தகவல் அல்ல என்று இந்திய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    செய்திகளில் மேற்கோள் காட்டப்பட்ட அதிகாரி கோஹினூர் பற்றி குறிப்பிடவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் பழங்கால பொருட்களை மீட்டெடுக்கும் செயல்முறையில் கவனம் செலுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    details

    கோஹினூர் வைரம் விக்டோரியா மகாராணி கையில் எப்படி கிடைத்தது?

    ராணி கமிலா தனது கிரீடத்திற்கு மாற்று வைரங்களைத் தேர்ந்தெடுத்த போதிலும், கடந்த வாரம் பிரிட்டனில் நடந்த முடிசூட்டு விழாவில் கோஹினூர் வைரம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

    105 காரட் கோஹினூர் வைரம் இந்திய ஆட்சியாளர்களின் கைகளில் இருந்த ஒரு மதிப்புமிக்க பொருளாகும்.

    பிரிட்டிஷ் இந்தியாவை ஆட்சி செய்த போது, அந்த மதிப்புமிக்க வைரம் மகாராஜா ரஞ்சித் சிங்கின் கருவூலத்திலிருந்து கிழக்கிந்திய கம்பெனியின் கைகளில் கிடைத்தது.

    அதன் பிறகு, அது விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டது.

    சமீபத்தில் வெளியான டெய்லி டெலிகிராப் நாளிதழின் அறிக்கையில், கோஹினூரை திரும்ப பெறுவது இந்திய அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

    அது தவறான அறிக்கை என்று இந்திய அரசாங்க அதிகாரிகள் தற்போது மறுத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரிட்டன்
    இங்கிலாந்து
    யுகே

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1 பாஜக
    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 2 கர்நாடகா
    உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ரிதம் சங்வான் உலக கோப்பை
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு பஞ்சாப்

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா

    இங்கிலாந்து

    இங்கிலாந்து பீர் பாட்டிலில் இந்து தெய்வத்தின் படம்: ட்விட்டர் சர்ச்சை உலகம்
    பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு இந்தியா
    தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்விகள்! தத்தளிக்கும் உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்து! ஒருநாள் கிரிக்கெட்
    பிரதமரின் ஆவணப்படம்: தடைக்கு எதிரான மனுக்களை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் மோடி

    யுகே

    இறுதி சடங்குக்கு பதில் பார்ட்டி வைத்த பாட்டி உலகம்
    சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து உலகம்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025