NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு 
    குற்றம் சாட்டப்பட்ட ரியாஸ் அக்தாரி மற்றும் கவுஸ் முகமது ஆகியோர் சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டனர்.

    உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 13, 2023
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஜஸ்தான்: உதய்பூர் தையல்காரர் கன்ஹையா லால் டெலியினை கொலை செய்த கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று குற்றம் சாட்டியுள்ளார்.

    நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக வகுப்புவாத பதட்டத்தைத் தூண்ட முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக தலைவர் நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகக் கூறி, தையல்காரரான கன்ஹையா லால், கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி, உதய்பூரில் உள்ள அவரது கடைக்குள் இரு ஆசாமிகளால் பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்டார்.

    நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதற்காக நூபுர் ஷர்மா பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்தது.

    சிபிஜன்க்

    தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட வழக்கு 

    அப்போது உதய்பூர் தையல்காரர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.

    இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட ரியாஸ் அக்தாரி மற்றும் கவுஸ் முகமது ஆகியோர் சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு முதலில் உதய்பூரில் உள்ள தன்மண்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, அதன் பின்னர், ஜூன் 29, 2022 அன்று, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு(தீவிரவாத தடுப்பு) மாற்றப்பட்டது.

    இந்நிலையில், ஜோத்பூரில் நேற்று நடந்த பிரச்சார பயணத்தின் போது பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தேசிய புலனாய்வு முகமைக்கு(என்ஐஏ) பதிலாக ராஜஸ்தான் காவல்துறை இந்த வழக்கைக் கையாண்டிருந்தால், விசாரணையில் உண்மை வெளி வந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

    டவ்க்

    ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று கூறியதாவது:

    அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.அப்போது எனக்காக திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை ரத்து செய்துவிட்டு நான் உதய்பூருக்கு புறப்பட்டேன்.

    ஆனால், உதய்பூர் சம்பவத்தை அறிந்த பிறகும் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாஜகவின் பல முக்கிய தலைவர்கள் சென்றனர்.

    சம்பவத்தன்று என்ஐஏ சம்பந்தமே இல்லாமல் இந்த வழக்கை எடுத்துக்கொண்டது. ஆனால் அதற்கு மாநில அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைத்தது.

    என்ஐஏ என்ன நடவடிக்கை எடுத்தது என்பது யாருக்கும் தெரியாது. எங்கள் காவல்துறை இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தால், குற்றவாளிகள் இப்போது நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.

    டக்லஜ்வ்க்ன்

     அசோக் கெலாட் மேலும் கூறியதாவது: 

    குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு உள்ளது. சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, வேறு சில வழக்கில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தபோது, ​​சில பாஜக தலைவர்கள் அவர்களை விடுவிக்க போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    தேர்தல் தோல்வியை உணர்ந்த பாஜக வினோதமான கூற்றுக்களை முன்வைத்து வருகிறது.

    நாங்கள் அறிமுகப்படுத்திய திட்டங்கள் மற்றும் நாங்கள் கொண்டு வந்த சட்டங்கள் பற்றி அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

    தேர்தலுக்கு முன் பிரச்சனைகளை கிளப்பவே அவர்கள் நினைக்கிறார்கள். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

    லஃனக்க்

    கடந்த மாதம் பிரதமர் மோடி இந்த பிரச்சனை குறித்து கூறியதாவது:

    "உதய்பூரில் என்ன நடந்தது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமானது. துணி தைக்க வேண்டும் என்று கூறி தையல் கடைகளுக்குச் சென்ற சிலர், சட்டத்துக்குப் பயப்படாமல் தையல்காரரின் கழுத்தை அறுத்துள்ளனர். ஆனால், காங்கிரஸ் இந்த வழக்கை வாக்கு சேகரிக்க அரசியலாக பார்த்து வருகிறது. நான் காங்கிரஸிடம் என்ன கேட்க விரும்புகிறேன் என்றால் உதய்பூர் தையல்காரர் கொல்லப்பட்டதற்குப் பிறகு வாக்கு வங்கி அரசியலைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்?" என்று பிரதமர் மோடி அக்டோபர் 2 ஆம் தேதி நடந்த பேரணியில் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்
    காவல்துறை
    காவல்துறை
    என்ஐஏ

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் இந்தியா
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா

    காவல்துறை

    க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்  க்ரைம் ஸ்டோரி
    லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி லியோ
    சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை அரசு பள்ளி
    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு

    காவல்துறை

    கோவையில் போக்சோ சிறை கைதி தப்பி ஓட்டம் சிறை
    பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்  பெங்களூர்
    டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் டெல்லி
    கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை  கேரளா

    என்ஐஏ

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை கோவை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மதுரை
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025