NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே நாளில் 2 நீட் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தானின் கோட்டாவில் என்ன நடக்கிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே நாளில் 2 நீட் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தானின் கோட்டாவில் என்ன நடக்கிறது?
    4 மணி நேரங்களுக்குள் இந்த இரண்டு தற்கொலைகளும் பதிவாகியுள்ளன.

    ஒரே நாளில் 2 நீட் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தானின் கோட்டாவில் என்ன நடக்கிறது?

    எழுதியவர் Sindhuja SM
    Aug 28, 2023
    06:46 pm

    செய்தி முன்னோட்டம்

    பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான கோச்சிங் நிறுவனங்களுக்கு பெயர் போன நகரம் ராஜஸ்தானில் உள்ள கோட்டாவாகும்.

    இந்த நகரத்தில் சமீபகாலமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், கோட்டாவில் தங்கி படித்து வந்த அவிஷ்கர் சுபாங்கி மற்றும் ஆதர்ஷ் என்ற இரு மாணவர்கள் கடந்த 24 மணிநேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    தகவ்ன்ல்

    கோச்சிங் நிறுவனங்களில் அடுத்த ஒரு மாதத்திற்கு தேர்வு நடத்த தடை 

    இந்த வருடத்தில் மட்டும், கோட்டாவில் தங்கி படித்து வந்த 23 மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்ததுள்ளனர்.

    நேற்று உயிரிழந்த இரண்டு மாணவர்களுமே மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் ஆவர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து, கோச்சிங் நிறுவனங்களில் அடுத்த ஒரு மாதத்திற்கு எந்த ஒரு தேர்வும் நடத்தப்படக்கூடாது என்று கோட்டா ஆட்சியர் ஓ.பி.பங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    ட்னவ்க்ஜ்

    ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவர் 

    மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவிஷ்கர் சுபாங்கி கோட்டாவில் உள்ள தனது தாத்தா பாட்டி வீட்டில் வசித்து கொண்டே நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    அவர் திடீரென்று, ஒரு தேர்வை முடித்து விட்டு கோச்சிங் நிறுவனத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அப்பகுதியில் இருந்த மக்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனேவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது.

    நக்க்க்ஜ்

    கொரோனா பரவலுக்கு பிறகு தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 

    தற்கொலை செய்து கொண்ட இன்னொரு மாணவரான ஆதர்ஷ், நேற்று மாலை குனாட்டி என்ற பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    4 மணி நேரங்களுக்குள் இந்த இரண்டு தற்கொலைகளும் பதிவாகியுள்ளன.

    கொரோனா பரவலுக்கு பிறகு தற்கொலைகளின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

    கொரோனா ஊரடங்கின் போது, மிகக் குறைவான மாணவர்களே கோட்டாவில் தற்கொலை செய்து கொண்டனர் என்கிறது தரவுகள்.

    2018ஆம் ஆண்டில், 12 தற்கொலைகள் கோட்டாவில் பதிவாகியுள்ளன. 2017ஆம் ஆண்டில், 10 மாணவர்கள் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு, 15 கோட்டா மாணவர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர்.

    டவ்க்ஜ்ன்

    தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் கோட்டாவில் உள்ள விடுதிகள்

    இந்நிலையில், இந்த ஆண்டு இன்னும் முடிவடையாத நிலையில், அதற்குள் 23 தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பீதியை கிளப்பியுள்ளது.

    கடந்த வாரம், 15 காய்ச்சல் மாத்திரைகளை உட்கொண்ட ஒரு மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக அவரது நண்பர் தெரிவித்திருந்தார்.

    மாணவர்கள் இது போன்ற செய்லகளை செய்யாமல் இருக்க, கோட்டாவில் உள்ள விடுதிகளில் ஸ்பிரிங்-லோடட் ஃபேன்கள் பொறுத்தப்படுவது தற்போது வழக்கமாகி இருக்கிறது.

    மேலும், பால்கனிகள் மற்றும் லாபிகளில் "தற்கொலை தடுப்பு வலைகளை" விடுதிகள் புதிதாக வாங்கி நிறுவி வருகின்றன.

    போட்டி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கோட்டாவுக்குச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்
    தற்கொலை
    நீட் தேர்வு

    சமீபத்திய

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி
    தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல் பொறியியல்

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் இந்தியா
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025