NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை - கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை - கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது 
    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை - கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை - கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது 

    எழுதியவர் Nivetha P
    Jun 21, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்பட்டது.

    இதுகுறித்த வழக்குகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் ஆலையிலுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவினை தாக்கல் செய்தது.

    இதற்கு அனுமதியளித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் வழிகாட்டுதல்படி கழிவுகளை அகற்ற உத்தரவிட்டது.

    இதனையடுத்து ஸ்டர்லைட்ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு செய்து அதற்கான அறிவிப்பினை அண்மையில் வெளியிட்டது.

    இதற்கான செலவுகளை நிர்வாகமே ஏற்கவேண்டும் என்றும் தமிழகஅரசு தெரிவித்திருந்தது.

    இதற்காக ஸ்டர்லைட் ஆலையின் அதிகாரிகள் 2 பேர் உள்பட 9 பேர் கொண்ட குழுவும் துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டது.

    பணிகள் துவக்கம் 

    உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிப்பு 

    அதன்படி ஆலையிலுள்ள ஜிப்சம் போன்ற கழிவுகளை அகற்றுவது, கழிவுக்குழியிலிருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4ம்கழிவுக்குழியின் கரை உடைப்படாமல் அதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளல், பசுமை பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் செய்யப்படவேண்டும் என்று முடிவானது.

    இதனைத்தொடர்ந்து, ஸ்டர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றும் பணியானது இன்று(ஜூன்.,21)காலை 10 மணிக்கு துவங்கியது.

    ஆலையிலிருந்து அகற்றும் கழிவுகள் அனைத்தும் தொழிற்சாலையின் பக்கவாட்டில் அமைந்துள்ள வாசல் வழியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக அந்த வாசல் உள்ள பகுதியில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

    அதேபோல் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டு ஆலையில் அகற்றும் பணிகள் யாவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், ஸ்டர்லைட் நிறுவன வாசலில் பாதுகாப்பு பணியில் 24 மணிநேரமும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு காவல்துறை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு

    உச்ச நீதிமன்றம்

    5 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று - புதிய வழக்குகள் ரத்து!  கொரோனா
    WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025