NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்; திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்; திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம்
    திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம்

    சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்; திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 22, 2024
    04:12 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்சியில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனங்கள் விமான சேவையை தொடங்கியுள்ளன.

    திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஏற்கனவே விமான சேவை இயக்கப்பட்டு வந்தன.

    சமீபத்தில் புதிய விமான முனையம் திருச்சியில் திறக்கப்பட்ட பிறகு, இங்கிருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக் கூறப்பட்டு வந்தது.

    இந்நிலையில், சனிக்கிழமை (செப்டம்பர் 21) திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

    இங்கிருந்து பாங்காக்கிற்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனி என வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்பட உள்ளது.

    வாட்டர் சல்யூட்

    விமான சேவை தொடக்கத்தை முன்னிட்டு வாட்டர் சல்யூட் நிகழ்வு

    சனிக்கிழமை விமான சேவை தொடக்கத்தை முன்னிட்டு, திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானத்திற்கு விமான நிலைய ஆணையத்தின் குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த விமானம் மேலே குறிப்பிட்டுள்ளபடி வாரத்தின் மூன்று நாட்களிலும், இரவு 10.35 மணிக்கு திருச்சி விமான நிலையத்திரு வந்தடைந்து, இரவு 11.05 மணிக்கு மீண்டும் பாங்காக் நோக்கி புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சனிக்கிழமை பாங்காக்கில் இருந்து திருச்சி வந்த முதல் விமானத்தில் 46 பயணிகள் வந்தனர்.

    மீண்டும் திருச்சியில் இருந்து விமானம் பாங்காக் கிளம்பியபோது, அதில் 176 பயணிகள் சென்றனர்.

    இரு நாடுகளுக்குமான சுற்றுலாவை மனதில் வைத்து இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    விமானம்
    விமான சேவைகள்
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    திருச்சி

    விபச்சார வழக்கை சாதகமாக முடித்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது  காவல்துறை
    பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து  ரயில்கள்
    கார்கில் நினைவு தினம் - திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்  தமிழ்நாடு
    திருச்சியில் வேளாண் சங்கமம் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர்

    விமானம்

    விமானம் ரத்து, தாமதம் குறித்து விஸ்தாராவிடம் மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது மத்திய அரசு
    வீடியோ: தென்மேற்கு ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் புறப்படும் போது கழண்டு விழுந்த என்ஜின் உலகம்
    12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விமானத்தில் பெற்றோருடன் அமர வேண்டும்: DGCA உத்தரவு விமான சேவைகள்
    சென்னை விமான நிலையத்தில் பல கோடிகள் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது சென்னை

    விமான சேவைகள்

    சென்னை: மீண்டும் இயங்க தொடங்கியது விமானங்கள்; மின் விநியோகம் திரும்பிய பகுதிகளின் விவரங்கள்  சென்னை
    விமானிகள், போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் ரத்து செய்யப்பட்ட 22 விமானங்கள் விமான நிலையம்
    கோ பர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கும் ஸ்பைஸ்ஜெட் வணிகம்
    டெல்லியில் ஏற்பட்டிருக்கும் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிப்பு  டெல்லி

    மாவட்ட செய்திகள்

    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு தமிழ்நாடு
    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு தமிழ்நாடு
    கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி கோவை
    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025