NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் ஆடி காரை கைப்பற்றியது புனே காவல்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் ஆடி காரை கைப்பற்றியது புனே காவல்துறை 

    பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் ஆடி காரை கைப்பற்றியது புனே காவல்துறை 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 14, 2024
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பயன்படுத்திய ஆடி காரை புனே போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அந்த வாகனம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி, தனியார் காரில் விஐபி நம்பர் பிளேட்டுடன் சிவப்பு மற்றும் நீல சைரனை பூஜா கேத்கர் பயன்படுத்தியுள்ளார்.

    மேலும், அனுமதியின்றி தனது வாகனத்தில் மகாராஷ்டிரா அரசு என்ற போர்டையும் அவர் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், மொத்தம் 21 போக்குவரத்து விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்த வாகனத்திற்கு ரூ.26,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா 

    காரின் ஆவணங்கள் இதுவரை போக்குவரத்து துறையிடம் சமர்ப்பிக்கப்படவில்லை

    அந்த காரின் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு உரிமையாளர்களுக்கு போக்குவரத்துக் காவல் துறை நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து, சதுஷ்ரிங்கி போக்குவரத்து காவல் நிலையத்தில் நேற்று இரவு, கேத்கரின் குடும்ப ஓட்டுநர் காரின் சாவியை ஒப்படைத்தார்.

    ஆனால், அதற்கான ஆவணங்கள் இதுவரை போக்குவரத்து துறையிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.

    34 வயதான பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி புஜா கேத்கர், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஆக்ரோஷமான நடத்தை மற்றும் UPSC தேர்வில் நடந்த பிற முறைகேடுகள் தொடர்பாக போலீசாரின் கண்காணிப்பில் உள்ளார்.

    தனக்கு ஒரு தனி அறை, கார், குடியிருப்பு மற்றும் ஒரு பியூன் வழங்க வேண்டும் என்று பதவியில் சேர்வதற்கு முன்பே பூஜா கேத்கர் பலமுறை கேட்டு பிற அதிகாரிகளை சங்கடப்படுத்தியாயதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    புனே

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி வழங்க திட்டம் தமிழ்நாடு
    க்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது  க்ரைம் ஸ்டோரி
    மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்  போராட்டம்
    திரையரங்குக்குள் பட்டாசு வெடிக்க, பாலபிஷேகம் செய்ய வேண்டாம்- சல்மான் கான் பாலிவுட்

    புனே

    புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு காவல்துறை
    புனே போர்ஷே விபத்து வழக்கில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது இளைஞனின் தாய் கைது  விபத்து
    புனே போர்ஷே விபத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார் 17 வயது டிரைவர்  இந்தியா
    புனே போர்ஷே விபத்து: இளைஞனின் தந்தை, தாத்தா மீது தற்கொலை வழக்கு பதிவு  தற்கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025