Page Loader
ஜூலை 1 முதல் ரயில் கட்டண உயர்வு: மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதிகரிப்பு உறுதி?
ஜூலை 1 முதல் ரயில் கட்டண உயர்வு?

ஜூலை 1 முதல் ரயில் கட்டண உயர்வு: மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதிகரிப்பு உறுதி?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 25, 2025
08:55 am

செய்தி முன்னோட்டம்

நீண்ட தூர மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க விரும்புபவர்கள், வரும் ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு, இந்திய ரயில்வேயின் வருவாயை உயர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டண உயர்வை அமல்படுத்தத் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அதிகரிப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. கட்டண உயர்வு விவரங்கள்: 500 கி.மீ., வரை - மாற்றமில்லை 500 கி.மீ.,க்கு மேல்: 2ம் வகுப்பு சாதாரண டிக்கெட் - கி.மீ.,க்கு ₹0.005(அரை காசு) மெயில்/எக்ஸ்பிரஸ் சாதாரண வகுப்பு - கி.மீ.,க்கு ₹0.01 (ஒரு காசு) ஏ.சி. வகை பெட்டிகள் - கி.மீ.,க்கு ₹0.02 (இரண்டு காசு)

விவரங்கள்

காரணம், விலக்கு உள்ளிட்ட விவரங்கள் 

எனினும் இந்த விலை உயர்வில் புறநகர் ரயில்கள் பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது நிலவும் அதே கட்டண விலையில் தான் பயணிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே போல சீசன் டிக்கெட்டுகள் மீதான கட்டணங்களில் மாற்றம் இல்லை என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ரயில்வே அமைச்சகம் கூறுகையில், இயக்கச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் முயற்சி போன்றவையே கட்டண உயர்வின் பின்னணி காரணங்களாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2014ல் மோடி அரசு வந்த பிறகு, அதே ஆண்டு 14.2% ரயில் கட்டண உயர்வு மற்றும் 6.5% சரக்குப் போக்குவரத்து கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. எனினும் கொரோனா பிந்தைய காலத்தில் நேரடி கட்டண உயர்வு இதுவே முதலாகும்.