Page Loader
கேரளா: கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே ஓடையில் காரை இறக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு 

கேரளா: கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே ஓடையில் காரை இறக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு 

எழுதியவர் Sindhuja SM
May 25, 2024
01:29 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருப்பந்தாரா பகுதிக்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாக் குழு, கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே, ஒரு ஓடையில் தங்கள் எஸ்யூவியை இறக்கியது. இன்று காலை அந்த காரில் இருந்த மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் ஆலப்புழாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அந்த சுற்றுலாப் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படாததால், உரிய நேரத்தில் காவல்துறையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து அவர்களை மீட்டனர். ஆனால், அந்த கார் ஓடையில் முழுமையாக மூழ்கிவிட்டதால், அதை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

கேரளா 

தமிழகத்தின் கூடலூரில் நடந்த கூகுள் மேப்ஸ் சம்பவம் 

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அந்த ஓடையில் இருந்த வெள்ளம் சாலை வரை பெருக்கெடுத்து ஓடி கொண்டிருந்ததது. மேலும், அந்த காரை ஓட்டிய ஓட்டுநர் பாதையைப் பார்க்காமல், கண்மூடித்தனமாக கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே ஓடையில் காரை இறக்கினார் என்று கூறப்படுகிறது. அருகில் இருந்த காவல் துறையினரும், அப்பகுதி மக்களும் விரைந்து வந்து அந்த சுற்றுலாப் பயணிகளை மீட்டனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தமிழகத்தின் கூடலூரில் கூகுள் மேப்ஸ் மூலம் தவறாக வழிநடத்தப்பட்ட ஒரு வாகனம் படிக்கட்டுகளில் சிக்கி விபத்துக்குள்ளானது. அதில் சென்ற நண்பர்கள் குழு ஒன்று கர்நாடகாவுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.