NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பற்களை பிடுங்கிய விவகாரம் - அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கோரும் சிபிசிஐடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பற்களை பிடுங்கிய விவகாரம் - அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கோரும் சிபிசிஐடி
    பற்களை பிடுங்கிய விவகாரம் - அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கோரும் சிபிசிஐடி

    பற்களை பிடுங்கிய விவகாரம் - அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கோரும் சிபிசிஐடி

    எழுதியவர் Nivetha P
    Sep 28, 2023
    06:34 pm

    செய்தி முன்னோட்டம்

    திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் ஏஎஸ்பி பொறுப்பில் இருந்தவர் பல்வீர் சிங்.

    இவர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரும் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கி தண்டனையளித்து வருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

    இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வீர் சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து உயர்மட்ட விசாரணை குழு பரிந்துரை செய்ததன் பேரில் இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

    இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கையினை உயர்மட்ட விசாரணை குழு அதிகாரி அமுதா மற்றும் அம்மாவட்ட சார்-ஆட்சியர் ஆகியோர் அளிக்கவேண்டும் என்று அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    வழக்கு 

    இறுதிக்கட்டத்தினை நெருங்கிய விசாரணை - சிபிசிஐடி 

    அந்த மனு மீதான விசாரணை இன்று(செப்.,28) நடந்த நிலையில், இதற்கான பதில் மனுவினை சிபிசிஐடி-ன் விசாரணை அதிகாரியான சங்கர் தாக்கல் செய்துள்ளார்.

    மேலும் அவர், இதுகுறித்த விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தினை நெருங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

    அதேபோல், குறிப்பிட்ட காவல்நிலையத்தில் சிசிடிவி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும்,

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரி அமுதாவின் அறிக்கையும், குற்றப்பத்திரிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

    அதேபோல் இந்த வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ளதால் இதன் அடுத்தகட்ட விசாரணையினை மேற்கொள்ள யுபிஎஸ்சி மற்றும் தமிழக அரசு அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருநெல்வேலி
    சிபிசிஐடி
    தமிழக அரசு

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை காவல்துறை
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு வைரல் செய்தி
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை உள்ளூர் செய்தி

    சிபிசிஐடி

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு

    தமிழக அரசு

    தமிழக மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் - டெண்டர் அறிவிப்பு  தமிழ்நாடு
    முதல்வரின் 'காலை உணவு திட்டம்' விரிவாக்கம் - கூடுதல் அதிகாரிகளை நியமிக்க உத்தரவு மு.க ஸ்டாலின்
    என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு  நெய்வேலி
    பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025