NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை 
    உத்தரகாண்ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை

    உத்தரகாண்ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை 

    எழுதியவர் Nivetha P
    Jul 07, 2023
    05:02 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ., ரூ.150ல் இருந்து ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இதனையறிந்த இல்லத்தரசிகள் கடும் வேதனையில் உள்ளார்கள்.

    இதனிடையே தக்காளியினை மக்களுக்கு குறைவான விலையில் விற்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து கொண்டு தான் உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக தக்காளியினை ரேஷன் கடைகளில் சோதனை முயற்சியாக விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தக்காளி 

    100 கிராம், 150 கிராம் அளவில் தக்காளியினை வாங்கி செல்லும் மக்கள் 

    இதன் மூலம், ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90க்கு விற்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

    இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் எதிர்பாரா அளவுக்கு தக்காளியின் விலையானது உச்சத்தை தொட்டுள்ளது.

    அதன்படி, உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி என்னும் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.200ல் இருந்து ரூ.250 வரை விற்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தக்காளியினை கொள்முதல் செய்யவே யோசிக்கும் நிலையானது நிலவுகிறது.

    ஒரு கிலோ, இரண்டு கிலோ தக்காளி வாங்கி சென்றோர் தற்போது இந்த விலை உயர்வால் 100 கிராம், 150 கிராம் என்னும் அளவில் வாங்கி சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு விற்கப்படும் தக்காளி தமிழக அரசு
    விபத்தில் குடும்பத்தையே இழந்த மாணவி அமுதாவின் மேற்படிப்புக்கு உதவ முன்வந்தது பள்ளிக்கல்வித்துறை சேலம்
    பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம் பொறியியல்
    வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு  தேர்தல் ஆணையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025