LOADING...
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்
38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2025
08:12 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் உள்ள 38 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து உள்ளனர். நாடு முழுவதும் 1.44 லட்சம் கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போது 892 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 6,606 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 82 சுங்கச்சாவடிகள் உள்ளன, இதில் தற்போது 78 சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்களை மீளாய்வு செய்து மாற்றும் நடைமுறையை பின்பற்றுகிறது. இதற்கிணங்க ஏற்கனவே ஏப்ரல் மாதம் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. தற்போது மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

விவரம்

புதிய கட்டண விவரங்கள்

கார்கள், ஜீப்புகள், வேன்களுக்கு ஒரு முறை பயணத்திற்கான கட்டணம் ₹85ல் இருந்து ₹90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை பயணத்திற்கு ₹125 இருந்து ₹135 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர சுமை வாகனங்களுக்கு ₹235 முதல் ₹1325 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை, சேலம், திருச்சி, திண்டுக்கல், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓமலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த கட்டண மாற்றம் இன்று முதல் அமலாகும். "சுங்கக்கட்டண வசூலின் 60% மட்டும் முதலீட்டை ஈடு செய்யும் நோக்கில் இருக்க வேண்டும். மீதமுள்ள 40% பராமரிப்புக்காக செலவிடப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் இது பின்பற்றப்படவில்லை." என லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சுங்கக்கட்டண விலை உயர்விற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.