NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல்
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

    ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 15, 2024
    04:14 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியாக இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் ஆட்தேர்வு மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, கடந்த ஜூன் 9ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது.

    பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை அடிப்படையாக கொண்ட இந்த தேர்வில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    வழக்கமாக, இதுபோன்ற தேர்வுகளின் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் வெளியிட்டுவிடும்.

    காலதாமதம்

    தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்

    வழக்கமாக மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றாலும், இந்த போட்டித் தேர்வுகளில் மிகவும் அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்றனர்.

    இதனால் தொழில்நுட்ப உதவியோடு தேர்வுத் தாள்களை திருத்தினாலும், அனைத்து தேர்வுத் தாள்களையும் திருத்தி முடிக்கவே குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

    இதனால், டிஎன்பிஎஸ்சி வட்டாரங்களில் இருந்து வந்துள்ள தகவலின்படி, ஜூன் மாத தொடக்கத்தில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் 2025 ஜனவரி அல்லது அதற்கு பின்னரே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் விரைவில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    சென்னை, மதுரை நகரங்களில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு சென்னை
    அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் மழை

    தமிழ்நாடு செய்தி

    கார்த்திகை தீபம் - திருவண்ணாமலையில் 2,500 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி  திருவண்ணாமலை
    தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் அறிக்கை  தமிழக அரசு
    பொள்ளாச்சி டு பிலிப்பைன்ஸ்; 86 வயதில் ஆசிய போட்டியில் 4 தங்கம் வென்ற தமிழக வீரர் தடகள போட்டி
    மக்களே தெரிஞ்சுக்கோங்க, அடுத்த மாதம் 24 நாட்கள் வங்கிகள் இயங்காதாம் வங்கிக் கணக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025