NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மஞ்சள் காய்ச்சல் எதிரொலி: 3 அரசு மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மஞ்சள் காய்ச்சல் எதிரொலி: 3 அரசு மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் 
    மூன்று அரசு மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்

    மஞ்சள் காய்ச்சல் எதிரொலி: 3 அரசு மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 15, 2024
    06:36 am

    செய்தி முன்னோட்டம்

    இரு தினங்களுக்கு முன்னர், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அனைவரும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து தற்போது, ஆப்பிரிக்க நாடுகளுக்கும், தென் அமெரிக்க நாடுகளுக்கும் செல்பவர்கள், மூன்று அரசு மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சு.,"ஆப்பிரிக்க நாடுகளுக்கும்,தென்அமெரிக்காவின் ஒரு சில நாடுகளுக்கும் செல்பவர்களுக்கு மஞ்சள் காய்ச்சலை தடுப்பதற்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும் என்பது விதியாகும். இந்த ஊசி போட்டுச்சென்றால் மட்டுமே விமான நிலையங்களில், அந்த நாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி கிடைக்கும். அதேபோல் அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும்போதும் அந்த தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்" என்றார்.

    தனியார் மருத்துவமனை

    "தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி இல்லை" 

    அதோடு சுகாதாரத்துறை அமைச்சர், "கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் இந்த தடுப்பூசி போடப்பட்டு வந்தது. பின்னர், தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டு கொள்பவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விமான நிலைய நிர்வாகம் அனுமதிப்பதில்லை" எனத்தெரிவித்தார்.

    "அதனால், கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகம், சென்னை துறைமுகத்தில் உள்ள மருத்துவமையம், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மருத்துவ மையம் என தடுப்பூசி போடப்படும் இடங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டு முழுநேரமும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இந்த மூன்று அரசு மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்" என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழக அரசு

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பு கோரிக்கைகளை நிராகரிக்க கூடாது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ராமர் கோயில்
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு  ஜெயலலிதா
    தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி  தமிழகம்
    தமிழகத்தில் கொரில்லா கிளாஸ் தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது கார்னிங் நிறுவனம் தமிழகம்

    தமிழகம்

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம் பிரதமர்
    பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு உயர்கல்வித்துறை
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025