Page Loader
இன்னும் 2 வாரங்களே கோடை விடுமுறை, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு
ஜூன் 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும்

இன்னும் 2 வாரங்களே கோடை விடுமுறை, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
May 24, 2024
02:44 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து தேர்தல் முடிவடைந்த பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூன் 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதன் பின்னர் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருவதற்கு ஆவண என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் 2 வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

embed

பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு

#BREAKING | கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது!#SunNews | #Summer | #SchoolsReOpen pic.twitter.com/EVur0ryrP6— Sun News (@sunnewstamil) May 24, 2024