NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள்
    ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

    பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 21, 2024
    11:55 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள் உட்பட, 60 பேர், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசு, தனித்திறனுடன் விளங்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டுக் வாய்ப்புகளை உருவாக்க 'கனவு ஆசிரியர்' திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

    இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் 32 ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 22 ஆசிரியர்கள் என, மொத்தம் 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் இதில் அடக்கம்.

    ட்விட்டர் அஞ்சல்

    முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!

    கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா?

    அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களும் - ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் நமது #DravidianModel அரசின் சிறப்பான… https://t.co/YU3fS5T7aj

    — M.K.Stalin (@mkstalin) October 20, 2024

    அன்பில் மகேஷ் 

    ஆசிரியர்களிடம் உரை நிகழ்த்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

    வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுடன் சந்தித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வாழ்த்து தெரிவித்தார்.

    இது பற்றி அவர் கூறியதாவது,"2023-24ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியப் பெருமக்களை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம். பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள கனவு ஆசிரியர்களை இன்று திருச்சியில் சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துகள் தெரிவித்தோம்" என்றார்.

    மேலும்,பள்ளி குழந்தைகளின் பற்களை பாதுகாக்க மாநில அரசு 'புன்னகை' திட்டம் செயல்படுத்தி வருகிறது என்றார்.

    மேலும், மாற்றுத்திறனாளி, ஆட்டிசம் மற்றும் இயன்முறை குறைபாடு உள்ள குழந்தைகளை கண்காணித்து கல்வி வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    2023-24ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியப் பெருமக்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம்.

    பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம்… pic.twitter.com/kNI93POZrB

    — Anbil Mahesh (@Anbil_Mahesh) October 20, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிக்கல்வித்துறை
    பள்ளி மாணவர்கள்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா

    பள்ளிக்கல்வித்துறை

    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்  தமிழகம்
    புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு அரசு பள்ளி
    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு

    பள்ளி மாணவர்கள்

    பேருந்து படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் - வாசல் ஓர ஜன்னல்களுக்கு இரும்பு கம்பிகள் அமைப்பு  காஞ்சிபுரம்
    செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம்  செங்கல்பட்டு
    10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு
    உல்லாசமாக துவங்கிய பள்ளி சுற்றுலா, துயரத்தில் முடிந்தது: 14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வதோதரா படகு விபத்து விபத்து

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும் வானிலை அறிக்கை
    செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை; புதிய அமைச்சர்களுக்கு பொறுப்புகள் அறிவிப்பு தமிழகம்
    ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே
    தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாநகராட்சி; தரம் உயர்த்தப்படுகிறது ஊட்டி; புதிய நகராட்சியை உருவாக்கவும் திட்டம் ஊட்டி

    தமிழ்நாடு செய்தி

    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? வானிலை அறிக்கை
    'பதவியல்ல.. பொறுப்பு'; துணை முதலைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி உதயநிதி ஸ்டாலின்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    ஆளுநர் மாளிகையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர் தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025