LOADING...
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கும் முயற்சியா? கணக்கெடுப்பிற்கான டெண்டரை அறிவித்த தமிழக அரசு
கணக்கெடுப்பிற்கான டெண்டரை அறிவித்த தமிழக அரசு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கும் முயற்சியா? கணக்கெடுப்பிற்கான டெண்டரை அறிவித்த தமிழக அரசு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 21, 2025
02:20 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு தேடி குடியேறியிருக்கும் வடமாநில தொழிலாளர்களுக்குத் தமிழ்நாட்டிலேயே வாக்குரிமை வழங்கும் சாத்தியம் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவம் நேரத்தில், தமிழக அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து விரிவான கணக்கெடுப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் 65.74 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியிருக்கலாம் என உள்நோக்கி கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தொழில்வாய்ப்பை நோக்கி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பரவலாக குடியேறியுள்ளனர்.

நோக்கம்

தமிழக அரசு கணக்கெடுப்பு எடுப்பதன் நோக்கம் என்ன

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடைபெறும் இந்த ஆய்வில், புலம்பெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு நிலை, வேலை நேரம், ஊதியம், வாழும் சூழ்நிலை, இடம்பெயர்ந்த வரலாறு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. அதன் மூலம் அவர்கள் நலன் மற்றும் சமூக பாதுகாப்பிற்கான கொள்கை பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் பின்னணி

புலம்பெயர்ந்தவர்களுக்கு வாக்கு உரிமை தருவதில் அரசியல் பின்னணி உள்ளதா?

இது வெறும் சமூகநல ஆய்வு மட்டுமல்ல; அரசியல் கணக்கீடுகளும் பின்னணியில் இருக்கின்றன** என்றே பரவலான செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சென்னை துறைமுகம் தொகுதியில் வடமாநில வாக்காளர்களின் தாக்கம் குறித்து விவாதம் எழுந்தது. சில சுற்றுகளில் பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் இந்த அளவிலான புலம்பெயர் வாக்காளர்களின் சேர்க்கை, தமிழ்நாட்டின் அரசியல் மீது வெளி மாநிலங்களின் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.