NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம் 
    RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம்

    RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம் 

    எழுதியவர் Nivetha P
    May 20, 2023
    06:16 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான 25%ஒதுக்கீட்டில் வேலூர்-புவனேஸ்வரிபேட்டையில் இயங்கி வரும் லிட்டில் ப்ளவர் மெட்ரிக் பள்ளியில் சுவேதன் என்னும் மாணவர் சேர்ந்துள்ளார்.

    இந்த மாணவனிடமும் அந்த பள்ளி நிர்வாகம் சீருடை மற்றும் பாடபுத்தகங்களுக்காக 11,977ரூபாய் கட்டணம் செலுத்த கோரி உத்தரவிட்டுள்ளார்கள்.

    இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட பொழுது, எந்த கட்டணமும் இல்லாமல் அந்த மாணவர் தனது படிப்பினை தொடரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதற்கு பின்னரும் அந்த மாணவருக்கு சீருடை, பாடப்புத்தகம் எதுவும் வழங்காத காரணத்தினால் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகாரளித்துள்ளனர்.

    அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் மாணவரின் தந்தை மகாராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    நீதிமன்றம் 

    தனியார் பள்ளிகள் கட்டணங்களை மாணவர்களிடம் கோர கூடாது என உத்தரவு 

    இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் மட்டும் செலுத்தாமல் அவர்கள் கற்க தேவைப்படும் அனைத்து பொருட்களின் கட்டணங்களையும் அரசு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    சீருடை, பாடபுத்தகங்களுக்கான கட்டணத்தையும் மாணவர்கள் பயிலும் தனியார் பள்ளிகளில் செலுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அடுத்த 2 வாரங்களுக்குள் இது சம்பந்தமான அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    தொடர்ந்து, தனியார் பள்ளிகளும் கட்டணங்களை மாணவர்களிடம் கோர கூடாது, மாநில அரசிடம் தான் கோரவேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை உயர் நீதிமன்றம்

    ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஈரோடு
    தேசிய அலுவல் மொழி குறித்து காயிதே மில்லத் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ் திருச்செந்தூர்
    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு தமிழ்நாடு

    தமிழ்நாடு

    சாதனை மாணவி நந்தினிக்கு, நேரில் சென்று தங்கபேனாவை பரிசளித்தார் வைரமுத்து திண்டுக்கல்
    நிலக்கரி பற்றாக்குறையால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு  கடலூர்
    புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கான எளியமுறை வழிமுறைகள்  இந்தியா
    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவின் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025